விக்கிரவாண்டி சட்டப் பேரவைத் தொகுதி முற்றிலும் கிராமங்களை உள்ளடக்கியதாகும். இந்தத் தொகுதியில் வாழும் மக்கள் பெரும்பா லும் விவசாயத்தை நம்பியே உள்ளனர். பருவ மழை தொடர்ந்து பொய்த்து போன தால் விவசாயம் படிப்படியாகக் குறைந்த தையடுத்து, இப்பகுதி விவசாயிகள் விளை நிலங்களை செங்கல்சூளைக்கும், ரியல் எஸ்டேட்டுக்கும் விட்டதால் ஒவ்வொரு கிராமத்திலும் பல ஏக்கர் விளைநிலங்கள் செங்கல் அறுக்கப்பட்டு படுபள்ளங்களாக வும், சில ஆண்டுகளாக ரியல் எஸ்டேட் தொழில் முடங்கி உள்ளதால் பல நூறு ஏக்கர் மனைகளாக பிரிக்கப்பட்டு காடு கரம்புகளாக மாறி கிடக்கின்றன. இப்பகுதியில் நெல் விளைச்சல் அதிகம் என்பதால் அரிசி ஆலைகளும் அதிகமாக இருந்தன. நாளடைவில் நெல் சாகுபடி குறைந்ததால் அதிகமாக இருந்த அரிசி ஆலைகளின் எண்ணிக்கையும் குறைந்து போனது. ஒரு காலத்தில் விக்கிரவாண்டி அரிசி என்றாலே தெரியாதவர்கள் யாரும் இல்லை என்ற நிலை மாறி ஆந்திரா, கர்நாடக அரிசிகளை வாங்கி விற்கும் அள விற்கு மாறிவிட்டது.
விக்கிரவாண்டி தொகுதியில் 103 ஊராட்சி மன்றங்கள், காணை, விக்கிர வாண்டி என இரண்டு ஊராட்சி ஒன்றி யங்கள் உள்ளன. இத்தொகுதியில் சுமார் 2 லட்சத்து 23 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர். கடந்த 2012 ஆம் ஆண்டுதான், விழுப்புரம் வட்டத்திலிருந்து விக்கிர வாண்டி வட்டம் உருவாக்கப்பட்டது. ஆனால் இதுவரை இங்கு வேலை வாய்ப்பு அளிக்கும் வகையிலான தொழிற் சாலைகள் எதுவும் கொண்டுவரப்பட வில்லை. அதேபோல, அரசுக் கல்லூரி கள், தொழிற்பயிற்சி நிலையங்களும் கிடை யாது. பம்பை ஆற்றின் குறுக்கே, கப்பியாம் புலியூர் பகுதியில் தடுப்பணை அமைக்க வேண்டுமென இப்பகுதி விவசாயிகள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வரு கின்றனர். தடுப்பணை அமைத்தால், சுற்றுப் பகுதியில் உள்ள 50 கிராமங்களில் விவசா யம் மேம்படும். குடிநீர் ஆதாரமும் உயரும். ஆனால், தடுப்பணை குறித்து ஆய்வு செய்ததுடன், அந்த கோரிக்கை கிடப்பில் உள்ளது. குடிசைகள் நிறைந்த விக்கிர வாண்டி தொகுதியில் அதிக தீ விபத்து கள் ஏற்படுகின்றன,
அப்போது 15 கி.மீ. முதல் 20 கி.மீ தொலைவில் உள்ள விழுப்புரத்தில் இருந்து தீயணைப்பு வாகனம் வருவ தற்குள் இழப்புகள் அதிகமாகி, சில நேரங்களில் உயிரிழப்பும் ஏற்படுகிறது, விக்கிரவாண்டியில் தீயணைப்பு நிலை யம் அமைக்க வேண்டும் என்பதும் இப்பகுதி மக்களின் நீண்டகாலக் கோரிக்கையாக இருந்து வருகிறது. இந்தத் தொகுதியில் உள்ள விளை நிலங்களில் பெரும்பாலானவை மானா வாரி. மழைக் காலங்களில் மட்டுமே ஒரு போக விவசாயம் நடைபெறும் நிலையில் பிறகு விளைநிலங்கள் வறட்சியாகி விடுவ தால், இங்குள்ள விவசாயிகள், இளை ஞர்கள் வாழ்வாதாரத் தைத் தேடி, சென்னை மற்றும் வெளி மாநிலங்களுக்கு செல்லும் நிலை தொடர்கிறது. இதனை தடுக்கும் வகையில் நந்தன் கால்வாய் திட்டத்தை செயல்படுத்தி சாத்தனூர் அணையின் உபரி நீர் அந்த கால்வாய் வழியாக வரும் வகையில் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். விக்கிரவாண்டியில் ஒரு கனரக தொழிற்சாலையை மற்றும் தொழிற் பேட்டை உருவாக்கி, வேலைவாய்ப்பை ஏற்படுத்த வேண்டும். இதனால் சிறு, குறு தொழில் நிறுவனங்களும் இயங்க உதவி யாக இருக்கும் என்பதும் இத்தொகுதி மக்களின் எதிர்பார்ப்பாகும்.
விக்கிரவாண்டி வட்டாட்சியர் அலுவல கம் வந்து செல்ல அதனைச் சுற்றியுள்ள கிராமங்களுக்கு பேருந்து வசதிபோது மானதாக இல்லை. விக்கிரவாண்டியை மையப்படுத்தி, தேவையான ஊர்களுக்கு அரசுப் பேருந்துகளை இயக்க வேண்டும். தினந்தோறும் நூற்றுக்கணக்கான மக்கள் வாகனங்களிலும், நடந்தும் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையை கடந்து விக்கிரவாண்டி வடக்கு புறவழிச்சாலை வழியாக நகரத்துக்குள் வருவதற்கு சாலையை கடக்கும் போது, விபத்து கள் தொடர்ந்து ஏற்பட்டு பலர் உயிரி ழந்துள்ளனர். இதனால், அங்கு மேம்பா லம் அமைக்க வேண்டும் என்று கடந்த 8 ஆண்டுகளாக மக்கள் கோரிக்கை வைத்து போராடி வருகின்றனர். சென்னை, விழுப்புரம், கும்பகோணம் வழித்தட புறநகர் பேருந்துகள் விக்கிர வாண்டியில் நிற்பதும் இல்லை, வட்ட அந்தஸ்து பெற்றுள்ள விக்கிரவாண்டியில் புறநகர் பேருந்துகள் நின்று செல்ல வேண்டும். விக்கிரவாண்டி பேரூராட்சி மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் குடிநீர் பிரச்சனை தீராத பிரச்சனையாக உரு வெடுத்து வருகிறது. அதற்கு நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும்.
இந்தத் தொகுதியை ஒட்டியுள்ள வீடுர் அணையை சீரமைத்தும், அங்குள்ள சுற்றுலா மையத்தை புதுப்பித்தும் பொழுதுபோக்கு அம்சத்துக்குரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை தொகுதி மக்கள் முன்வைத்து வருகின்றனர். இனியாவது விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் வெற்றி பெறும் அரசியல் கட்சி யினர், தொகுதியில் உள்ள பிரச்சனை களை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர்.
-பாவாடை பொன்னுசாமி