சென்னை, ஜூலை 23- ஆரம்ப சுகாதார நிலையங்களில் அனைத்து நோய்களுக்கும் சிகிச்சை அளிக்க வலியுறுத்தி வியாழனன்று (ஜூலை 23) திரு வெற்றியூர் இராமநாதபுரம் அரசு ஆரம்பப சுகாதார நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் களை கொரோனா சிகிச்சை பிரிவுகளுக்கு பணி செய்ய அனுப்பி வைக்கப்படுகின்றனர். இதனால் ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவர்கள் போதிய அளவு இருப்ப தில்லை. கர்ப்பிணி பெண்கள் மற்றும் காய்ச்சல் உள்ளோருக்கு ஒரே இடத்தில் கொரோனா பரிசோதனை செய்கின்றனர். இதனால் கர்ப்பிணி பெண்களுக்கு பாது காப்பு இல்லாத நிலை உள்ளது. எனவே, ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவர்கள் இருப்பதையும், நீரழிவு நோய், ரத்த அழுத்தம் உள்ளிட்ட அனைத்து நோய்களுக்கும் சிகிச்சை அளிப்பதையும் உறுதிபடுத்த வேண்டும், பணியாளர்களுக்கு தேவையான அளவு பாதுகாப்பு உபகரணங் கள் வழங்க வேண்டும், ஒரே இடத்தில் கர்ப்பிணிகளுக்கும், பொதுமக்களுக்கும் பரி சோதனை மாதிரி எடுக்க கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வைத்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் வட சென்னை மாவட்டச் செயலாளர் பாக்கியம், பகுதிச் செயலாளர் புஷ்பா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.