இளைஞர்களுக்காக மின் ஊழியர்கள் நடத்தும் வேலைவாய்ப்பு முகாம்
சென்னை, மே 31-சுமார் 5 ஆயிரம் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் ஞாயிறன்று (ஜூன் 2) சென்னையில் நடைபெறுகிறது. தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பு மற்றும் மால்டஸ் நிறுவனமும் இணைந்து இந்த முகாமை நடத்துகின்றன.இதுதொடர்பாக மத்திய அமைப்பின் துணைப்பொதுச் செயலாளர் தி.ஜெயசங்கர் கூறியதாவது:வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தரும் வகையில் இந்த முகாம் நடைபெறுகிறது. இதில் பன் னாட்டு நிறுவனங்கள் உள்ளிட்டு 35 வகையான தொழில் நிறுவனங்கள் பங்கேற் கின்றன.வங்கி மற்றும் நிதி நிறுவனங்களுக்கு 250 பேரும் (ஏதாவது ஒரு இளங்கலை பட்டப் படிப்பு), பிபிஓ நிறுவனங்களுக்கு 250 பேரும் (+2ஆம் வகுப்புக்கு மேல்), இ-பப்ளிகேஷன் நிறுவனங்களுக்கு 150 பேரும் (ஏதாவது ஒரு இளங்கலை பட்டப்படிப்பு), தளவாடங்கள் (லாஜிஸ்டிக்ஸ்) பிரிவில் ஆயிரம் பேரும் (10ஆம் வகுப்பிற்கு மேல்),சுகாதாரப் பிரிவில் 1200 பேரும் (நர்சிங் பட்டய/ பட்டப்படிப்பு), ரீடெயில் இன்ட ஸ்ட்ரீஸ் பிரிவில் 2 ஆயிரம் பேரும் (10ம் வகுப்புக்கு மேல்), ஆட்டோ மொபைல்ஸ் பிரிவில் 500 பேரும் (10, ஐடிஐ, பட்டயப் படிப்பு), எம்என்சி நிறுவனங்களில் 200 பேரும் (பெண் ஓட்டுநர்) தேர்வு செய்யப்பட உள்ளனர்.இந்தப்பணிகளுக்கு தகுதியான நபர்கள் தங்களது சுயவிவரக் குறிப்பு மற்றும் நகல் சான்றிதழ்களை கொண்டு வர வேண்டும். டி.ஜெ.நினைவகம், 177 சிங்கன்ன செட்டி தெரு, சிந்தாதிரிப்பேட்டை, சென்னை-2 என்ற முகவரியில் காலை 9 மணிக்கு முகாம் தொடங்கி நடைபெறும்.இவ்வாறு அவர் கூறினார்.மேலும் விவரங்களுக்கு 9444057470, 9841400937, 9444250709, 8682906007
அங்கீகாரம் இல்லா பள்ளிகள் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
திருவள்ளூர், மே 31 திருவள்ளூர் மாவட்டத் தில் பள்ளிக் கல்வித் துறையின் தடையின்மைச் சான்று மற்றும் அங்கீகாரமின்றி செயல்படும் பள்ளிகள் மீது சட்ட ரீதியாக உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் மகேஸ்வரி ரவிக் குமார் தெரிவித்துள்ளார்.குழந்தைகளுக்கான இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009 பிரிவு 18 (1)ல் தெரிவிக்கப்பட்டுள்ள தற்கிணங்கவும், சென்னை, உயர்நீதிமன்ற வழக்கு தீர்ப்பாணையின்படியும், அனைத்து வகை பள்ளிகளும் பள்ளிக் கல்வித் துறையின் தடையின்மைச் சான்று மற்றும் அங்கீகாரம் பெற்றே செயல்படவேண்டும். திருவள்ளூர் மாவட் டத்தில் திருத்தணி, பள்ளிப் பட்டு, கும்மிடிப்பூண்டி உள்ளிட்டு 51 பள்ளிகள் அனுமதியின்றி செயல்படுவது ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. தொடர்ந்து தடையின்மைச் சான்று மற்றும் அங்கீகாரமின்றி செயல்படும் பள்ளிகள் மீது சட்டரீதியாக உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும், ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் எச்சரித்துள்ளார்.
தொழில் முனைவோர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்பு
சென்னை, மே 31-தமிழகத்தில் பெரிதும் கொண்டாடப்படுகின்ற, அதிக கவுரவம் மிக்க விருதுகளுள் ஒன்றான, இந்த ஆண்டுக்கான சின்னிகிருஷ்ணன் இனோவேஷன் விருதுகளுக்கான விண்ணப்பங்களை கவின்கேர் மற்றும் மெட்ராஸ் மேனேஜ்மெண்ட் அசோசியேஷன் வரவேற்கிறது. தற்போது 8வது பதிப்பாக வழங்கப்படவிருக்கும் இவ்விருது, இம்மாநிலத்தில், அதிகம் அறியப்படாத, புதுமையான சாதனை படைத்திருக்கும் தொழில்முனைவோர்களை அடையாளம் காண்பதையும் மற்றும் சமூக நலனையும், மதிப்பையும் இலக்காகக் கொண்டு செயல்படுகின்ற புத்தாக்க தொழில் நிறுவனங்களை கவுரவிப்பதையும் நோக்கமாக கொண்டிருக்கிறது. 2019 ஜூன் 16 ஆம் தேதிவரை, தங்களது விண்ணப்பங்களை – hவவயீ://அஅயஉhநnயேi.டிசப/ஊமுஐஹ/ என்ற வலைதளத்திலிருந்து விருதுக்காக விண்ணப்பிப்பவர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பிங்களை சமர்ப்பிப்பது குறித்து அதிக விவரங்களைப் பெற ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள், 9789960398 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் தரலாம் அல்லது றறற.அஅயஉhநnயேi.டிசப / றறற.உயஎiமேயசந.உடிஅ என்ற வலைதளத்தை பார்வையிடலாம்.