தமிழ்நாடு அரசுக்கு சிறு மற்றும் குறு வணிகர்கள் செலுத்த வேண்டிய வரி நிலுவைத் தொகை ரூ.50,000க்கும் கீழ் இருந்தால், அதனை தள்ளுபடி செய்வதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இரண்டாம் நாளான இன்று 110 விதியின் கீழ் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வணிகர்கள் மற்றும் நிறுவனங்களுக்கான வணிக வரி நிலுவைத் தொகை குறித்த புதிய சமாதான திட்டத்தை அறிவித்தார். அதன்படி, தமிழ்நாடு அரசுக்கு சிறு மற்றும் குறு வணிகர்கள் செலுத்த வேண்டிய வரி நிலுவைத் தொகை ரூ.50,000க்கும் கீழ் இருந்தால், அதனை தள்ளுபடி செய்வதாக முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
மேலும், ரூ.50,000 முதல் ரூ.10 லட்சம் வரை வரி நிலுவை வைத்துள்ள வணிகர்கள் 20% வரியை செலுத்தினால் போதும் என்றும், இதன் மூலம் 95,502 வணிகர்கள் பயன்பெறுவர் என்று அவர் அறிவித்துள்ளார்.