tamilnadu

கோடை விடுமுறை முடிந்தது முழு அளவில் துவங்கிய நீதிமன்ற பணிகள்!

சென்னை, ஜூன் 3- மே 2 முதல் ஜூன் 2 வரை  சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரைக் கிளைக்கு கோடை விடுமுறை விடப்பட்டது. இது ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இருந்தே கடைப் பிடிக்கப்படும் நடைமுறை யாகும். எனினும் அவசர வழ க்குகள் மட்டும் விசாரிக்கப் படும். அதன்படி முதல் வாரத்தில் நீதிபதி ஜெகதீஷ் சந்திரா, 2-ஆவது வாரத்தில் நீதிபதி பி.டி. ஆஷா, 3- ஆவது வாரத்தில் நீதிபதி ஜி. ஆர். சுவாமிநாதன், 4-ஆவது  வாரத்தில் நீதிபதி சத்திய நாராயண பிரசாத் தலை மையில் அவசர வழக்குகள் விசாரிக்கப்பட்டன. இந்நி லையில் ஜூன் 2-ஆம் தேதி யுடன் கோடை விடுமுறை முடிவடைந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றம் திங்கட்கிழமை முதல் மீண்டும் முழு அளவில் செயல்பட உள்ளது.

;