tamilnadu

img

சென்னை விரைவு செய்திகள்

தாய் இறந்த சோகத்தில்  மகன்  தற்கொலை

அம்பத்தூர், மார்ச் 23- திருமுல்லைவாயலில் நோயால் தாய் உயிரிழந்ததால், மகன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். அம்பத்தூர் அடுத்த திருமுல்லைவாயல் தென்றல் நகர் கிழக்கு 2ஆவது குறுக்கு தெருவைத் சேர்ந்தவர் வசந்தா (60). இவரது கணவர் ரத்தினவேலு பல ஆண்டுக ளுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களது மகன் சங்கர் (35). திருமணமாகாத இவர் மென்பொருள் நிறுவனத்தில் ஊழி யராகப்  பணியாற்றி வந்தார். இவர்களது மகள் உமாமகேஸ்வரி (42) அதே பகுதியில் தனது கணவர் குமார குருவுடன் வசித்து வருகிறார். இதற்கிடையில் வசந்தா மூச்சுத்திணறல் நோயால் அவதிப்பட்டு வந்துள்ளார். இவரது மகன் சங்கர்  பராமரித்து வந்துள்ளார். கடந்த 20ஆம் தேதி இரவு வசந்தா, சங்கர் ஆகியோரை அக்கம் பக்கத்தினர் பார்த்துள்ளனர். அதன் பிறகு அவர்கள் இருவரும் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. இந்நிலையில் சனிக்கிழமை இரவு வசந்தா வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதையடுத்து அக்கம் பக்கத்தினர் திருமுல்லைவாயல் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில்  சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் பொதுமக்கள் உதவி யுடன் உட்பக்கமாக தாழிட்டிருந்த கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு வசந்தா உயிரிழந்த நிலை யில் படுக்கையிலும், சங்கர் தூக்கிட்டும் இறந்துகிடந்தனர். இவர்களது உடல்கள் அழுகிய நிலையில் இருந்தது. இதை யடுத்து காவல் துறையினர் வசந்தா, சங்கர் சடலங்களை பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து உமா மகேஸ்வரி திருமுல்லைவாயல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இலங்கையில் விடுவிக்கப்பட்ட  11 மீனவர்கள்

சென்னை வருகை சென்னை, மார்ச் 23-  இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் சென்னை அழைத்து வரப்பட்டனர். கடந்த பிப்ரவரி மாதம் எல்லை தாண்டி மீன் பிடித்த தாகக் குற்றம்சாட்டப்பட்டு, இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 11 ராமேஸ்வரம் மீனவர்கள் சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர். அதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசு சார்பில் ஏற்பாடு செய்திருந்த வாகனம் மூலன் அனைவரும் சொந்த ஊரான ராமேஸ்வரத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

ரூ.8 ஆயிரத்தில் விவோ ஒய்19இ  ஸ்மார்ட்போன் அறிமுகம்  

சென்னை, மார்ச் 24-  புதுமையான உலகளாவிய ஸ்மார்ட்போன் பிராண்டான விவோ, தனது ஒய் மாடல் வரிசையில் ஒய்19இ ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. நுகர்வோருக்கு தடையற்ற பயனர் அனுபவத்தை வழங்கும் வகையில் இந்தப் பிரிவின் மிகப்பெரிய 5500 எம்ஏஎச்பேட்டரி, யூனிசாக்டி7225 ஆக்டா-கோர் செயலி, 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி மெமரி கார்டு மற்றும் ஐபி64 தூசி மற்றும் தண்ணீர் உள்ளே புகாத வகையில் இந்த ஸ்மார்ட்போன் தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்திலான 13 எம்பிஇரட்டை கேமரா உள்ளது, இது நுகர்வோரின் ஒட்டுமொத்த புகைப்பட அனுபவத்தை மேம்படுத்த ஏஐஎரேஸ்மற்றும் ஏஐ என்கேன்ஸ்போன்ற அம்சங்களைக் கொண்டுள்ளது. டைட்டானியம் சில்வர் மற்றும் மெஜஸ்டிக் க்ரீன் ஆகிய இரு வண்ணங்களில் அனைத்து வரிகளும் உட்பட ரூ.7,999-க்கு கிடைக்கிறது.

சிறுகுறு வியாபாரிகள்  சங்க புதிய கிளை துவக்கம்

பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் புறநகர் அமைப்புசாரா சிறுகுறு வியாபாரிகள் சங்கத்தின் புதிய கிளை சனிக்கிழமையன்று (மார்ச் 22) மடிப்பாக்கம் ஏரிக்கரையில் உதயமானது. இந்த அமைப்புக் கூட்டத்தில் சங்கத்தின் பொருளாளர் எஸ்.அரிகிருஷ்ணன், துணைத் தலைவர் எஸ். முகமது ரஃபி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கிளைத் தலைவராக கே.முரளி, செயலாளராக முருகன், பொருளாளராக அகமது ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.