tamilnadu

மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு பாலியல் தொல்லை: ஒருவர் கைது

வேலூர், ஜூலை 3- வேலூர் மாவட்டம் காட்  பாடி அடுத்த காங்கேய நல்லூர் அருந்ததியர் காலனி பஜனை கோவில் தெருவைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி கார்த்தி. இவர்  காந்தி நகரில் உள்ள தனி யார் பள்ளியில் துப்புரவு தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவருக்கு கடந்த பத்து  வருடங்களுக்கு முன்பு பிற வியிலேயே பேச்சாற்றலை  இழந்த மாற்றுத்திறனாளி யான சரோஜா என்பவருடன்  திருமணம் நடைபெற்றது. இவர் கடந்த 20 நாட்களுக்கு  முன்பு தனது வீட்டருகே உள்ள கடைக்கு சென்று விட்டு திரும்பி வரும் போது,  காங்கேயநல்லூர் மடம் தெருவைச் சேர்ந்த வெங்கடேசன்,  ரஞ்சித் குமார் இருவரும் சரோ ஜாவை மடக்கி அருகிலுள்ள முட்புதருக்குள் கொண்டு சென்று  பாலியல் வன்புணர்வு  செய்ய முயற்சித்துள்ளனர். அவர்களிடமிருந்து தப்பி வீட்டுக்கு வந்தவர்  தன் கண வரிடம் நடந்தவற்றை கூறி யுள்ளார். அவர் இது வெளி யில் தெரிந்தால் அசிங்கம்  எனவே நடந்தவற்றை வெளி யில் கூற வேண்டாம் என்று சமாதானப்படுத்தியுள்ளார்.  இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு அவரது கணவர் வேலைக்கு சென்ற பின்பு வீட்டிற்குள் சரோஜா தனி யாக இருப்பதை அறிந்து நுழைந்த இருவரும் அவரை பாலியல் வன்புணர்ச்சி செய்துள்ளனர். அவரது அலறல் சத்தம் கேட்டு வந்த கார்த்தியின் சகோதரர்கள் வீட்டுக்கு வந்து பார்த்தபோது சரோ ஜாவிடம் தவறாக நடந்த இருவரையும் பிடிக்க முயன்றார். அதில் வெங்க டேசன் தப்பிவிட, ரஞ்சித் குமார் மட்டும் பிடிபட்டார். தகவலறிந்து அங்கு வந்த மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.டி.சங்கரி, தாலுகா செய லாளர் கேஜே.ஸ்ரீனிவாசன், தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்டச் செயலாளர் கோபால. ராஜேந்திரன் ரஞ்சித்குமாரை காவல்  நிலையத்தில் ஒப்படைத்த னர். இதுகுறித்த புகாரின் பேரில் காவல் துறையினர் இருவர் மீதும் எஸ்சி எஸ்டி  வன்கொடுமை தடுப்புச் சட்ட பிரிவின் கீழ் வழக்குப்  பதிவு செய்து, ரஞ்சித் குமாரை கைது செய்தனர். தப்பி ஓடிய வெங்கடேசனை தேடி வருகிறார்கள்.