tamilnadu

அரை சதமடித்த தக்காளி விலை

சென்னை, ஜூன் 9- சென்னை கோயம்பேடு  மொத்த காய்கறி சந்தையில் தக்காளி வரத்து குறைந்து உள்ளதால் விலை உயர்ந்துள்ளது.

தமிழ்நாட்டில் ஏப்ரல் மற்றும் மே 2ஆவது வாரம் வரை வெயில் கடுமையாக சுட்டெரித்து வந்தது.அதைத் தொடர்ந்து சில நாட்கள் கனமழையும் பெய்தது.

மழை காரணமாக சென்னை கோயம்பேடு சந்தைக்கு தக்காளி வரத்து குறைந்து காணப்பட்டது. இதனால் கிலோ தக்காளி ரூ.50  வரை உயர்ந்தது. மழை குறைந்த நிலையில் கிலோ தக்காளி 25 ரூபாயாக குறைந்தது.இந்நிலையில் தமிழ்நாடு, அதை ஒட்டிய கர்நாடகா, ஆந்திரா எல்லையோர பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக தொடர் மழை பெய்து வரு கிறது. இதனால், கோயம்பேடு சந்தைக்கு  தக்காளி வரத்து குறைந்ததால் மீண்டும் தக்காளி விலை கிலோ ரூ.50க்கு விற்பனை செய்யப்பட்டது.