tamilnadu

img

ஆங்கில ஒலிம்பியாட்டில் வென்ற டிஜெஎஸ் பள்ளி மாணவருக்கு பாராட்டு

திருவள்ளூர், மே19-எடுஹீல் நிறுவனம் சார்பில் நடத்தப்பட்ட ஆங்கில ஒலிம்பியாட் போட்டியில் வெற்றி பெற்ற டி.ஜெ.எஸ் பப்ளிக் சிபிஎஸ்சி பள்ளியின் முதல் வகுப்பு மாணவர் வி.ஆர்.அபிஷேக் சாய்க்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது. எடு`ஹீல் பவுன்டேஷன் ஒலிம்பியாட் நிறுவனம் சார்பில் கடந்த ஜன. 28ஆம் தேதிநடைபெற்ற ஆங்கில திறனறிதேர்வு நடத்தப்பட்டது. இதில் 400 பள்ளிகளை சேர்ந்த 1 லட்சத்து 35 ஆயிரம்மாணவர்கள் பங்கேற்றனர். இந்த தேர்வின் முடிவுகள் சில நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்டன. இந்நிலையில் இந்த தேர்வில் வி.ஆர்.அபிஷேக் சாய் இந்திய அளவில் மூன்றாம் இடம் பிடித்தார்.இதையடுத்து எடுஹீல் நிறுவனத்தின் சார்பில் மாணவர் அபிஷேக் சாயிற்கு ரூ. 5 ஆயிரம் ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது. வெற்றி பெற்ற மாணவர் அபிஷேக் சாயிற்கு டி.ஜெ.எஸ் பப்ளிக் சிபிஎஸ்சி பள்ளியில் டிஜெ.எஸ் கல்வி குழுமத் தலைவர் டி..ஜெ.கோவிந்தராஜன் தலைமையில் பாராட்டு விழா நடைபெற்றது. பள்ளி தாளாளர் தமிழரசன், முதல்வர் சுகாதா தாஸ் முன்னிலை வகித்தனர்.வி.ஆர்.அபிஷேக் சாயைபாராட்டிய டி.ஜெ.கோவிந்தராஜன் அடுத்தடுத்து நடைபெற உள்ள திறனறித் தேர்வுகளில் வெற்றி பெற வாழ்த்தினார்.