tamilnadu

img

பொங்கல் பரிசு: பெண்களுக்கு தனி வரிசை....

சென்னை:
பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் இரண்டாயிரத்து ஐநூறு ரூபாயும் வழங்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை கூட்டுறவுத்துறை வெளியிட்டுள்ளது.

அதன்படி,  தமிழகத்தில் அரிசி பெறும் குடும்ப அட்டைகளுக்குப் பொங்கல் பரிசுவழங்கும்போது முதியோர், மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.பெண்களுக்கு தனி வரிசை அமைக்க வேண்டும். மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில் ஆயிரம் குடும்ப அட்டைகளுக்கு மேல் உள்ள நியாய விலைக்கடைகளில் கூடுதலாக ஒரு பணியாளரை நியமிக்க வேண்டும்.ஒரு நாளில் காலையில் நூறு பேருக்கும், பிற்பகலில் நூறு பேருக்கும் என 200 குடும்ப அட்டைகளுக்கு மிகாமல் பரிசுத்தொகையை வழங்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

;