tamilnadu

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

இன்று போலியோ  சொட்டு மருந்து முகாம்
சென்னை, மார்ச் 2 - போலியோ எனப்படும் இளம்பிள்ளை வாத நோய் முற்றிலுமாக ஒழிக்கப்பட்ட நாடாக இந்தியா அறிவிக்கப்பட்டு இருந்தாலும், பிறந்தது முதல் ஐந்து வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும், கடந்த 4 ஆண்டுகளாக, ஆண்டுக்கு ஒருமுறை போலியோ சொட்டு மருந்து வழங்கப்படு கிறது. அதன்படி ஞாயிற்றுக்கிழமை யன்று (மார்ச் 3) தமிழகம் முழுவதும் 57.84 லட்சம் குழந்தை களுக்கு அரசு ஆரம்ப சுகாதார நிலை யங்கள், அரசு மருத்துவமனைகள், அங் கன்வாடி மையங்கள், சத்துணவு மையங் கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்கள் என மொத்தம் 43,051 மையங்களில் போலி யோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.

வழக்கத்தை விட வெயில் சுட்டெரிக்கும்
தமிழகத்தில் மார்ச் 4 வரை இயல்பை விட வெயில் அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரி வித்துள்ளது. “மார்ச் 2 முதல் 8 வரை தமிழ கம், புதுவை மற்றும்  காரைக்கால் பகுதி களில் வறண்ட வானிலை நிலவக்கூடும். மார்ச் 4 வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக் கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்” என்று வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.