tamilnadu

img

கவிஞர் வைரமுத்து மருத்துவமனையில் அனுமதி....

சென்னை:
உடல்நலக்குறைவு காரணமாக கவிஞர் வைரமுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.தமிழ் திரைப்பட உலகில்‌ ஏழு முறை தேசிய விருது வென்ற பாடலாசிரியர். 1980 முதல் தற்போது வரை சுமார் 40 ஆண்டுகளாக தொடர்ந்து பாடல்கள் எழுதி வருகிறார். கவிதை, சிறுகதைகள், நாவல் என பல்வேறு புத்தகங்களையும் வெளியிட்டுள்ளார்.தற்போது சமூகம் சார்ந்த பிரச்சனைகளுக்கும் குரல் கொடுத்து வருகிறார் வைரமுத்து. தில்லி விவசாயிகள் போராட்டத் திற்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்.இந்நிலையில் வைரமுத்துவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இருதய நோய் சிகிச்சைக்காக சென்னை ஆயிரம் விளக்கு அப்போலோ மருத்துவமனையில் வைரமுத்து உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டுள்ளார்.ஆனால் அவர் வழக்கமான பரிசோதனைக்காக மட்டுமே மருத்துவமனைக்குச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.இந்நிலையில் வைரமுத்து உடல்நிலை குணமடைய வேண்டும் என்று பிரபலங் கள் வாழ்த்தியுள்ளனர்.

;