சென்னை,செப்.18- கேரளாவில் இருந்து தமிழ்நாட்டிற் குள் நிபா வைரஸ் பரவாமல் தடுக்க, எல்லையோர மாவட்டங்களில் 24 மணி நேரமும் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் உத்தரவிட்டுள் ளார்.
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 24 வயது இளைஞர் ஒருவர் நிபா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந் தார். அவருடன் தொடர்பில் இருந்த 151 பேர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர். அவர்களில் 5 பேருக்கு நிபா வைரஸ் அறிகுறிகள்உள்ளன.
இதையடுத்து, தமிழகம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இந்த பாதிப்பு பரவாமல் தடுப்ப தற்கான நடவடிக்கைகள் தீவிரப் படுத்தப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக பொது சுகா தாரத்துறை இயக்குநர் கூறுகை யில், தமிழ்நாட்டில் நிபா வைரஸ் பர வலைத் தடுக்க கேரள எல்லை யோர மாவட்டங்களில் உள்ள சோத னைச் சாவடிகளில் மருத்துவ கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு ள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் சுகாதாரக் குழுக்களை கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்துமாறு உத்தரவிடப் பட்டுள்ளது.
எல்லையோர மாவட்டங்களில் கண்டறியப்படும் காய்ச்சல் குறித்து முழு தகவலையும் சுகாதாரத் துறைக்கு அனுப்பி வைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கேர ளாவில் இருந்து வருபவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டு, காய்ச்சல் அறிகுறி இல்லை என்பதை உறுதி செய்த பிறகுதான் தமிழகத்துக்குள் அனுமதிக்க வேண்டும். தொற்று பாதிப்பு இருந்தால், அவர்களை தனிமைப்படுத்தி உரிய சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
அறிகுறிகள்
காய்ச்சல், சளி, இருமல், தலை வலி, சுவாசிப்பதில் சிரமம், மன நிலை மாற்றம் ஆகிய அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக மருத்துவ பரிசோதனை மேற் கொள்ள வேண்டும். தமிழகத்தில் இதுவரை நிபா வைரஸ் பாதிப்பு இல்லை. ஆனாலும், பொது இடங்களுக்கு செல்லும் போது முகக் கவசம் அணிந்தால், அனைத்து விதமான தொற்றுகளில் இருந்தும் தற்காத்துக் கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.