tamilnadu

img

சீரக சம்பா நெல்லுக்கு மாற்றாக புதிய நெல் வகை அறிமுகம்

வைகை அணை ஆராய்ச்சி நிலையத்தில் முதன் முறையாக


தேனி, செப். 20- தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழ கத்தின் கீழ் செயல்படும் வைகை அணையில் உள்ள ஆராய்ச்சி நிலையத்தில் சீரக சம்பா நெல்லுக்கு மாற்றாக புதிய சுவையுடன் புதிய நெல் வகை அறிமுகப்படு த்தப்பட்டுள்ளது . தமிழ்நாடு வேளாண் பல்கலைக்க ழகத்தின் கீழ்  செயல்படும் வைகைஅணை  ஆராய்ச்சி நிலையத்தில் தற்போது விஜிடி1 எனும் பிரியாணி ரக அரிசி உருவாக்கப்பட்டுள்ளது. பாரம்பரிய சீரகச்ச ம்பா, ஆடுதுறை 43ஆகிய நெல் ரகங்களை கொண்டு விஜிடி -1 என்ற புதிய நெல் ரகம் உருவாக்கப்பட்டுள்ளது . இது குறித்து ஆராய்ச்சி நிலையத் தலைவர் ஜூலியட் ஹெப்சியா கூறியதாவது: 130நாட்களில் மகசூல் தரும். 30 தூர்கள் வரை இருப்பதால் ஒரு மீட்டர் அளவிற்கு வளர்ந்தாலும் சாயாது. ஒரு ஹெக்டேர் க்கு 5 ஆயிரத்து 860 கிலோ மகசூல் கிடைக்கி றது. சீரகச்சம்பா உருவாக் பப்பட்டதல்ல. பாரம்பரிய மானது. இதில் உள்ள சில இடர்பாடுகளைக் களைந்து இந்த ரகம் உருவாக்கப்பட் டுள்ளது. இதனை பல்வேறு ஆராய்ச்சி மையங்கள், விவ சாய நிலங்கள் உள்ளிட்ட 101 இடங்களில் சோதனை செய்யப்பட்டுள்ளது. விளைந்த அரிசியை தமிழ கத்தின் பல்வேறு பிரபல ஓட்டல்களுக்கு அனுப்பி சமைத்து வாடிக்கையா ளர்களின் கருத்துக்களையும் கேட்டறி ந்தோம். சீரகச் சம்பாவை விட 32சதவீதம் கூடுதல் மகசூல் திறன் கொண்டது. சமைக்கும் போது அரிசி கள் பக்கவாட்டில் விரிவடை யும். ஆனால் இந்த ரகம் நீள்வாக்கில் விரிவடையும். ஆயிரம் அரிசிமணிகள் 8.9 கிராம் எடை மட்டுமே கொண்டது. இதனால் ஒரு ஏக்கருக்கு 10 கிலோ விதை நெல் போதுமானது. பல்வேறு நோய்தாக்கு தல்களை எதிர்கொள்ளக் கூடியது. மிருதுவாக, உதி ரித்தன்மையும் இருக்கும். விவசாயிகளுக்கு ஒரு கிலோவிற்கு ரூ.22 வரை விலை கிடைக்கும். தற்போது இந்த மையத்தில் 1.5டன் அரிசி இருப்பு உள்ளது என்றார்.