சென்னை:
இயற்கையால் ஏற்பட்டுள்ள பாதிப்பு என்பதை கணக்கில் கொண்டு பயிர் சேதத்திற்கு முழு இழப்பீடு வழங்குவதற்கு அரசு முன்வர வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
சங்கத்தின் பொதுச்செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங் களில் சமீபத்தில் வீசிய சூறாவளிக் காற்று மற்றும் மழையால் வேளாண்மை பயிர்கள் பெரும் சேதமடைந்துள்ளன. குறிப்பாக, தேனி மாவட்டம் பெரியகுளம், சின்னமனூர், தேனி ஆகிய பகுதிகளில் சுமார் 500 ஏக்கரில் வாழை மற்றும் கரும்பு முற்றிலும் அழிந்து போயுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலை ஒன்றியம் செங்கம் வட்டத்தில் சுமார் 200 ஏக்கரில் வாழை முற்றாக அழிந்துள்ளது. இதேபோல் திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி, ராதாபுரம் வட்டங்களில் சுமார் 325 ஏக்கரிலும் வாழை அழிந்துள்ளது. பல இடங்களில் தென்னை, பாக்கு மரங்களும் வேரோடு சாய்ந்துள்ளன.
இதனால் ஒவ்வொரு விவசாயிக்கும் லட்சக்கணக்கான ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. வங்கியில் கடன் பெற்றும், வியா பாரிகளிடம் முன்பணம் பெற்றும் பயிரிட்ட வாழை விவசாயிகள் செய்வதறியாது கலங்கிப் போயுள்ளனர். இவ்வளவு பெரிய பாதிப்பு ஏற்பட்ட பிறகும் பார்வையிடுவ தற்கு கூட அரசு அதிகாரிகள் இதுவரை வரவில்லை என்று விவசாயிகள் தெரி விக்கின்றனர்.
இயற்கை இடர்பாடுகள் ஏற்படுகிற போது உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக தேர்தல் நடத்தை விதிகளை காரணம் காட்டி பாராமுகமாக இருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. எனவே, பயிர் சேதம் குறித்து கணக்கெடுப்பு நடத்திட வேளாண்மைத்துறை மற்றும் வருவாய்த் துறையினர் முன்வர வேண்டும். இயற்கையால் ஏற்பட்டுள்ள பாதிப்பு என்பதை கணக்கில் கொண்டு பயிர் சேதத்திற்கு முழு இழப்பீடு வழங்குவதற்கு அரசு முன்வர வேண்டும் இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.இயற்கையால் ஏற்பட்டுள்ள பாதிப்பு என்பதை கணக்கில் கொண்டு பயிர் சேதத்திற்கு முழு இழப்பீடு வழங்குவதற்கு அரசு முன்வர வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள் ளது.
சங்கத்தின் பொதுச்செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங் களில் சமீபத்தில் வீசிய சூறாவளிக் காற்று மற்றும் மழையால் வேளாண்மை பயிர்கள் பெரும் சேதமடைந்துள்ளன. குறிப்பாக, தேனி மாவட்டம் பெரியகுளம், சின்னமனூர், தேனி ஆகிய பகுதிகளில் சுமார் 500 ஏக்கரில் வாழை மற்றும் கரும்பு முற்றிலும் அழிந்து போயுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலை ஒன்றியம் செங்கம் வட்டத்தில் சுமார் 200 ஏக்கரில் வாழை முற்றாக அழிந்துள்ளது. இதேபோல் திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி, ராதாபுரம் வட்டங்களில் சுமார் 325 ஏக்கரிலும் வாழை அழிந்துள்ளது. பல இடங்களில் தென்னை, பாக்கு மரங்களும் வேரோடு சாய்ந்துள்ளன.
இதனால் ஒவ்வொரு விவசாயிக்கும் லட்சக்கணக்கான ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. வங்கியில் கடன் பெற்றும், வியா பாரிகளிடம் முன்பணம் பெற்றும் பயிரிட்ட வாழை விவசாயிகள் செய்வதறியாது கலங்கிப் போயுள்ளனர். இவ்வளவு பெரிய பாதிப்பு ஏற்பட்ட பிறகும் பார்வையிடுவ தற்கு கூட அரசு அதிகாரிகள் இதுவரை வரவில்லை என்று விவசாயிகள் தெரி விக்கின்றனர்.
இயற்கை இடர்பாடுகள் ஏற்படுகிற போது உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக தேர்தல் நடத்தை விதிகளை காரணம் காட்டி பாராமுகமாக இருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. எனவே, பயிர் சேதம் குறித்து கணக்கெடுப்பு நடத்திட வேளாண்மைத்துறை மற்றும் வருவாய்த் துறையினர் முன்வர வேண்டும். இயற்கையால் ஏற்பட்டுள்ள பாதிப்பு என்பதை கணக்கில் கொண்டு பயிர் சேதத்திற்கு முழு இழப்பீடு வழங்குவதற்கு அரசு முன்வர வேண்டும் இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.