tamilnadu

img

உண்ணாநிலை போராட்டம்: திமுக கூட்டணிக்கு அனுமதி மறுப்பு...

சென்னை:
தில்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து திமுக கூட்டணி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் உண்ணாநிலைப் போராட்டத்துக்கு திமுக சார்பில் அனுமதி கேட்டு கடிதம் கொடுத் தும் காவல்துறையினர் அனுமதி மறுத்துள்ளனர்.

தில்லியில் 20 நாட்களுக்கும் மேலாக விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்துக்கு ஆதரவாக தமிழகத்தில் திமுக மற்றும் அதன் தோழமைக் கட்சியினர் போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள்.இந்த நிலையில் திமுக மற்றும் அதன் தோழமைக் கட்சித் தலைவர்கள் பங்கேற்கும் உண்ணாநிலை போராட்டம் வெள்ளியன்று (டிச.18) சென்னை நுங்கம்பாக் கத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் அருகில் போராட்டங் கள் நடைபெறும் இடத்தில் உண்ணாநிலைப் போராட்டம் இருக்க திமுக சார்பில் காவல் துறையிடம் முறைப்படி அனுமதி கேட்கப்பட்டது. ஆனால் அதற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்துள்ளனர்.இது தொடர்பான கடிதமும் திமுகவுக்கு காவல்துறை  தரப்பில் அனுப்பி வைக்கப் பட்டுள்ளது.இருப்பினும் தடையை மீறி திட்டமிட்டபடி போராட்டம் நடத்த திமுக மற்றும் அதன் கூட்டணி தலைவர்கள் முடிவு செய்துள்ளனர்.திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்  போராட்டத்துக்கு தலைமை தாங்குகிறார். திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மதிமுக, விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட அனைத்து கூட்டணி தலைவர்களும் கலந்து கொள்கிறார்கள்.இதற்காக 3 மேடைகள் அருகருகே அமைக்கப்பட்டு உள்ளது.

நடுவில் போடப்படும் மேடையில்மு.க.ஸ்டாலின் மற்றும் தோழமைக்கட்சி தலைவர்கள் அமரும் வகையில் நாற்காலிகள் போடப்பட உள்ளன.வலதுபுறம் போடப்படும் மேடையில் திமுக மற்றும் தோழமைக் கட்சிகளை சேர்ந்த எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் அமருகிறார்கள். இடதுபுறம் போடப்படும் மேடையில் திமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் தோழமைக்கட்சிகளின் மாநில நிர்வாகிகள் அமரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.போராட்டம் நடைபெறும் இடத்துக்கு திமுக நிர்வாகிகள் மற்றும் தோழமைக் கட்சி தொண் டர்கள் வந்து செல்லும் வகையில் ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன.மேடையின் முன்புறம் ஆயிரம் இருக்கைகள் போடப்படுகின்றன. இந்த இருக்கைகளில் முக்கிய நிர்வாகிகள் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள்.வெளியில் இருந்து வரும் தொண்டர்கள் போராட்டம் நடைபெறும் இடத்துக்கு வந்து விட்டு உடனடியாக செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.உண்ணாநிலை போராட் டத்தையொட்டி நுங்கம்பாக் கத்தில் 250-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.கொரோனா பரவலால் பொதுஇடங்களில் கூட்டங்கள் மற்றும் போராட்டங்களுக்கு விதிக்கப்பட்ட தடை  19 ஆம் தேதி முதல் தான் அரசியல் கூட்டங்களுக்கு அனுமதி அளிக்கப் பட்டுள்ளது. இதனை காரணம் காட்டியே  உண்ணாநிலை போராட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

;