tamilnadu

வணிக பிரிவில் 300 ச.மீட்டர் வரையிலான வீடு, கடை: மின் இணைப்பு பெற கட்டிட நிறைவு சான்று தேவை இல்லை!

சென்னை, ஆக. 10- வணிகப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட 300 சதுர மீட்டருக்குள் வீடு, கடைகள் சேர்த்து கட்டப்பட்டு இருந்தாலும், புதிய மின் இணைப்பு பெற கட்டட நிறைவுச் சான்றிதழ் தேவை இல்லை என மின்வாரியம் தெரி வித்துள்ளது.

வீடு, கடை, வணிக நிறுவனங்களுக்கான கட்டடங்களை கட்டி முடித்த பிறகு, உள்ளாட்சி அமைப்புகளிடம் இருந்து பணி நிறைவு சான்றிதழ் பெற்று சமர்ப்பித்தால் தான் மின்சாரம், குடிநீர் இணைப்புகள் வழங்கப்படும்.

குடியிருப்பு திட்ட பிரிவில் 8 வீடுகள் அல்லது 750 சதுர மீட்டருக்கு கட்டும்  கட்டடங்களுக்கு புதிய மின் இணைப்பு வழங்க பணி நிறைவு சான்று பெறுவதில் இருந்து ஏற்கனவே விலக்கு அளிக்கப் பட்டுள்ளது.

மேலும், வணிகப் பிரிவில் 300 சதுர மீட்டர் வரையும், 14 மீட்டர் உயரத்துக்கு மிகாமலும் கட்டப்படும் கட்டடங்களுக்கு மின் இணைப்பு வழங்க பணி நிறைவு சான்றிதழ் பெறுவதில் இருந்து கடந்த ஜூன் மாதம் விலக்கு அளிக்கப்பட்டது. எனினும், பல இடங்களில் ஒரே கட்டிடத்தில் தரை தளத்தில் கடை, மேல் தளத்தில் வீடு கட்டும் போது கட்டிட நிறைவு சான்று கேட்பதாக புகார்கள் எழுந்தன.

இதையடுத்து, வணிகப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட 300 சதுர மீட்டருக்குள் வீடு, கடைகள் சேர்த்து கட்டப்பட்டு இருந்தா லும், மின் இணைப்பு பெற கட்டிட நிறைவு சான்றிதழ் கேட்க கூடாது என பொறியாளர்க ளுக்கு மின் வாரியம் உத்தரவிட்டுள்ளது.