tamilnadu

img

குரூப் 4 தேர்வு முறைகேடு: மேலும் ஒருவர் கைது

சென்னை:
குருப் 4 தேர்வு முறைகேடுவிவகாரத்தில் மேலும் ஒருவரை சிபிசிஐடி காவலர்கைது செய்துள்ளனர். நெல்லை, விழுப்புரம், சிவகங்கை என தமிழகத்தின்பல்வேறு இடங்களில் விசாரணை தீவிரமடைந்துள்ளது.தமிழ்நாடு அரசுபணியாளர் தேர்வாணையத்தால் கடந்த ஆண்டு நடத்தப்பட்ட குருப் 4 தேர்வில் முறைகேடு நடைபெற்றது தொடர்பாக சிபிசிஐடி காவலர்கள் விசாரணைநடத்தி வருகின் றனர். இடைத்தரகராக செயல்பட்டு வந்த திருவல்லிக்கேணியை சேர்ந்த ரமேஷ், மாமல்லபுரத்தை சேர்ந்த திருக்குமரன், தேர்வில் முறைகேடு செய்து வெற்றி பெற்ற திருவல்லிக்கேணியை சேர்ந்த நரேஷ்குமார் ஆகிய3 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதேபோல் மற்ற பகுதிகளில் உள்ள அதிகாரிகளுக்கும் இந்த முறைகேட்டில் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் விசாரணை நடைபெற்று வருகிறது.மேலும், சிவகங்கை, தஞ்சை, நெல்லை, விழுப்புரம் ஆகியமாவட்டங்களிலும் விசாரணையை விரிவுபடுத்தினர்.விழுப்புரத்தில் 11 பேரிடமும், நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகேவுள்ள விஜயாபதியை சேர்ந்த இடைத்தரகர் அய்யப்பன், தேர்வு எழுதிய முத்து ராமலிங்கம் ஆகிய 2 பேரிடம் சிபிசிஐடி காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்நிலையில், கடலூர் மாவட்டம் பண்ருட்டி சிறுகிராமம் என்ற ஊரைச் சேர்ந்த ராஜசேகரனையும் சிபிசிஐடி காவலர்கள் கைது செய்தனர். இதேபோல் மேலும் 3 பேரை பிடித்து எழும்பூரில் உள்ள சிபிசிஐடி தலைமையகத்தில் வைத்துகாவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

;