அரசு ஊழியருக்கு வழங்குவது போல் 1ஆம் தேதியே பென்ஷன் வழங்க வேண்டும், 13ஆவது ஊதிய ஒப்பந்தப்படி 2.44 விழுக்காடு உயர்வு அனைவருக்கும் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்து ஓய்வூதியர் சங்கம் சார்பில் காஞ்சிபுரத்தில் உள்ள போக்குவரத்து மண்டல அலுவலகம் முன்பு மாநில நிர்வாகக்குழு உறுப்பினர்கள் டி.பலராமன், டி.கணேசன் தலைமையில் வெள்ளியன்று (ஜன.3) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாநில துணைச் செயலாளர் ஜி.ராமச்சந்திரன், இணைச் செயலாளர் சி.ராதாகிருஷ்ணன் மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் எஸ்.வேணுகோபால், காஞ்சி மண்டலச் செயலாளர் வி.இமயவரம்பன், தலைவர் கே.எஸ்.சம்பந்தம் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.