tamilnadu

img

உரிமம் இல்லா இறைச்சி கடை நடத்துபவர்கள் மீது குற்ற வழக்குகள் பதிய தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு

உரிமங்கள் இல்லாமல் இறைச்சிக் கடைகளில் ஆடு, கோழிகளை வெட்டுபவர்களுக்கு எதிராக குற்ற வழக்கு பதிவு செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டம், பனகல் கிராமத்தில் முகமது அலி என்பவர் உரிமம் இல்லாமல் இறைச்சிக்கடையில் ஆடு, கோழிகள் வெட்டப்படுவதாக கூறி, பன்னீர்செல்வம் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். மேலும் உணவுக்காக விலங்குகள் வெட்டப்படுவதை முறைப்படுத்தும், விதிகளை அமல்படுத்த உத்தரவிட வேண்டும் என அவர் தனது மனுவில் கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், உரிமம் இல்லாமல் ஆடு, கோழிகளை வெட்டுபவர்களுக்கு எதிராக குற்ற வழக்குகள் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். விதிகளை அமல்படுத்தாத அதிகாரிகளுக்கு எதிராகவும்  நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.


 

;