சென்னை,நவ. 10 சென்னையில் உள்ள டாக்டர் மோகன்ஸ் நீரிழிவு சிறப்பு சிகிச்சை மையத்தால் நடத்தப்பட்ட உலக நீரிழிவு தின நிகழ்வில் நீரிழிவை தாங்களே வெற்றிகரமாக போரிட்டு வென்ற அல்லது நெருங்கிய குடும்ப உறுப்பி னர் நீரிழிவை வெல்வதற்கு உதவிய சாதனையாளர்கள் பாராட்டப்பட்டனர். ஸ்பெயின் நாட்டவரான பிரபல சர்வதேச சைக்கிள் பந்தய வீரர் பிரெய்ஸ் டகால், 7 வயது சிறுவனாக இருந்த போது வகை 1 நீரிழிவு இருப்ப தாக உறுதி செய்யப்பட்டது. அந்த வயதிலிருந்தே, எதிர்காலத்தில் ஐக்கிய நாடுகள் சங்கத்திற்காக சிறப்பாக பணியாற்றிய தனது வாழ்க்கைப்பணி காலம் முழுவதும் நீரிழிவை எதிர்த்து போரிட்ட தனது அனுபவத்தை பகிர்ந்து கொண்டார். சைக்கிள் பந்த யம் மற்றும் நீரிழிவு நிலை யோடு வாழ்வது மீதான அவரது அனுபவம் குறித்து மிக உத்வேகமளிக்கும் அற்புதமாக உரையாற்றி வருவதற்காக இவர் பிரபலமாக அறியப்படு கிறார்.
தேசிய ஸ்குவாஷ் சேம்பியனான சைரஸ் பூஞ்சா, டைப் 1 நீரிழிவு நிலை கொண்ட அவரது மனைவி ரோஷன் குறித்து பேசினார். நீரிழிவு பாதிப்பை எப்படி அவர் சிறப்பாக நிர்வகித்து சமாளித்தார் மற்றும் 2 குழந்தைகளை வெற்றிகரமாக வளர்த்தார் என்று விளக்கமளித்த சைரஸ், பல நாடகங்க ளில் சிறப்பாக நடித்து, புகழ்பெற்ற நாடகக்கலை ஞராகவும் தனது மனைவி திகழ்ந்ததை பெரு மிதத்தோடு குறிப்பிட்டார்.இந்நிகழ்வின்போது உரையாற்றிய டாக்டர். மோகன்ஸ் நீரிழிவு சிறப்பு சிகிச்சை மையத்தின் தலைவர் டாக்டர். ஏ. மோகன், நீரிழிவுநோயாளிகள் குடும்பத்தால் வழங்கப்படும் ஆதரவைக் கொண்டும் உடற்பயிற்சிகளில் ஈடுபட்டும் மட்டுமே சிறப்பான வாழ்க்கையை வாழமுடியும் என்றார். மையத்தின் நிர்வாக இயக்குநர் டாக்டர். சு.ஆ. அஞ்சனா, கல்விப் பிரிவு நிர்வாக இயக்குநர் ரஞ்ஜித் உன்னிகிருஷ்ணன் உள்பட பலர் இதில் கலந்து கொண்டனர்.