சென்னை, ஜூன் 13- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தி.நகர் பகுதிக்குழு உறுப்பினரும், ஆட்டோ டாக்சி ஓட்டுநர் சங்கத்தின் தி.நகர் தெற்கு பகுதி முன்னாள் தலை வருமான தோழர் ஏ.துரை வெள்ளி யன்று (ஜூன் 12) காலமானார். அவ ருக்கு வயது 60. புற்றுநோயால் பாதிக்கப்பட்டி ருந்த அவர், செங்கல்பட்டு கண்ணாப் பேட்டையில் உள்ள அவரது மகனின் இல்லத்தில் உயிரிழந்தார். அன்னாரது உடலுக்கு கட்சி யின் தி.நகர் பகுதிச் செயலாளர் இ.மூர்த்தி, தென்சென்னை மாவட்டக்குழு உறுப்பினர் எம்.ரெங்கசாமி, ஆட்டோ டாக்சி ஓட்டுநர் சங்க மாவட்டத் தலைவர் ஜெ.அனீபா உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். இதனைத் தொடர்ந்து சனிக்கிழமையன்று (ஜூன் 13) அன்னாரது இறுதி நிகழ்ச்சிகள் நடைபெற்றன.