சென்னை:
2020-21ஆம் கல்வியாண்டில் இளங் கலை முதலாமாண்டு, முதுகலை படிப்புகளில் நடப்புக் கல்வி ஆண்டில் சேர்ந்து பின்னர் விலகிய மாணாக்கரின் முழுக் கல்விக் கட்டணத்தை கல்லூரிகள் திருப்பிச் செலுத்த வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக் குழு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளுக்குப் பல்கலைக் கழக மானியக்குழு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், “தற்போது கொரோனா பரவல் காரணமாக பெற்றோர்கள், மாணாக்கர் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்றனர். இந்தச் சூழ்நிலையில் நடப்பு கல்வியாண்டில் கல்லூரிகளில் சேர்ந்து விலகிய மாணாக்கரின் கல்விக் கட்டணத்தை முழுமையாக கல்வி நிறுவனங்கள் அவர்களுக்குத் திருப்பித் தர வேண்டும்இதுதொடர்பாக ஏராளமான புகார்கள் பல்கலைக்கழக மானியக் குழுவிற்கு வந்ததால், இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. பல்கலைக்கழக மானியக்குழுவின் இந்த உத்தரவை மீறி செயல்படும் கல்லூரி நிர்வாகங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.