tamilnadu

இலங்கை கடற்படை கைது செய்த மீனவர்களை மீட்கவேண்டும்

சென்னை, டிச.11 - இலங்கைக் கடற்படை யினரால் கைது செய்யப்பட்ட 25 மீனவர்களையும் உடனடியாக மீட்க வலியுறுத்தி ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். 

அதன் விவரம் வருமாறு:-
விசைப்படகில் மீன்பிடிக்கச் சென்ற நாகை மீன்பிடித் துறை முகத்தைச் சேர்ந்த 12 மீனவர்கள், மயிலாடுதுறை மற்றும் காரைக் கால் பகுதிகளைச் சேர்ந்த 13 மீனவர்கள் டிசம்பர் 9 அன்று இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர் என்று கவலைபடத் தெரிவித்துள்ளார்.

அதோடு, மற்றொரு மீன்பிடிப் படகு இலங்கை கடற்படையின் ரோந்துக் கப்பலால் சேதப்படுத் தப்பட்டுள்ளதையும் முதல மைச்சர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். 

இலங்கைக் கடற்படையி னரால் இந்திய மீனவர்கள் மீதான தாக்குதல்கள் சமீபகாலமாக அதி கரித்து வருவது, நமது மீனவர்க ளின் வாழ்வாதாரம் மற்றும் பாதுகாப்பில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தி வருவதாக தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ள முதலமைச்சர், இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர் களையும் அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக மீட்க உரிய நடவடிக்கைகளை இலங்கையில் உள்ள இந்தியத் தூதரகம் மேற்கொள்ள உத்தர விடுமாறு ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரை கேட்டுக் கொண்டுள்ளார்.