செங்கல்பட்டு: ஊரடங்கை மீறியதாக 36 ஆயிரம் வழக்குகள் பதிவு
செங்கல்பட்டு, ஜூலை 3- ஊரடங்கை மீறியதாக செங்கல்பட்டு மாவட்டத்தில் 36 ஆயிரத்து 160 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்றை கட்டுப்படுத்த 6வது கட்டமாக ஊரடங்கை அரசு பிறப்பித்துள்ளது. ஊரடங்கு கால விதிமுறைகளை மீறி வெளியில் வருவோர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிந்து அபராதம் விதிப்பதோடு, வாகனங்களையும் பறிமுதல் செய்கின்றனர். செங்கல்பட்டு மாவட்டத்தில், ஊர டங்கை மீறியதாக 36 ஆயிரத்து 160 வழக்கு கள் பதியப்பட்டு, 31 ஆயிரத்து 841 இரு சக்கர வாகனங்கள், 377 மூன்று சக்கர வாக னங்கள், 1064 நான்கு சக்கர வாகனங்கள் என 33 ஆயிரத்து 282 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், உரிய ஆவ ணங்கள் இன்றி சுற்றிய 36 ஆயிரத்து 252 நபர்கள் கைது செய்யப்பட்டு பிணையில் விடு விக்கப்பட்டுள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்க ளில் 20 ஆயிரத்து 793 வாகனங்கள் அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளது.
சிதம்பரம் அருகே மீதிகுடியில் 13 தொழிலாளர்களுக்கு கொரானா
சிதம்பரம், ஜூலை 3- கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே மீதிகுடி கிராமத்தில் 100 நாள் வேலை செய்யும் தொழிலாளர்கள் 13 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதில் 10 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். 3 பேர் மருத்துவ மனையில் உள்ளனர். இதையடுத்து அந்த பகுதியில் எடுக்கப்பட்ட நடவ டிக்கைகள் மற்றும் அப்பகுதி மக்களுக்கு தேவையான உதவிகள் குறித்து தமிழக தொழில்துறை அமைச்சர் சம்பத், சிதம்பரம் எம்எல்ஏ பாண்டியன், மாவட்ட ஆட்சி யர் சந்திரசேகர் சகாமூரி, சிதம்பரம் சார் ஆட்சியர் விசு மகாஜன், வட்டாட்சியர் ஹரிதாஸ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு நடத்தினர். பின்னர் தொற்று தடுப்பு நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு அறி வுறுத்தினர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் போதுமான மருத்துவ வசதி இல்லை
கள்ளக்குறிச்சி, ஜூலை 3- மாவட்டம் முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் துணை ஆட்சியர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளையும் இது விட்டு வைக்கவில்லை. ஏற்கனவே மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ள நிலையில் மாவட்ட மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் வென்டிலேட்டர், படுக்கை வசதி, மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் உள்ளிட்ட மருத்துவ வசதிகளை அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. மாவட்டம் முழுவதும் துவக்கத்தில் 10 படுக்கைகள் மட்டும் கொண்டு தனிமைப்படுத்தப்பட்ட பிரிவு துவக்கப்பட்டது. இந்நிலை யில் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ மனையில் விபத்து மற்றும் அறுவை சிகிச்சை பிரிவுக்கான முழு கட்டட மும் தனிமைப்படுத்தப்பட்ட பிரிவாக மாற்றப்பட்டது. இங்கு 16 அறை களில் 100 படுக்கைகள், 10 வென்டி லேட்டர் அமைக்கப்பட்டன. ஜூன் மாதம் முடிய 850 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு இதில் 364 பேர் குணமடைந்துள்ளனர். 2 பேர் இறந்துள்ள நிலையில் மீதி 484 பேரில் 367 பேர் அறிகுறி இல்லாமல் தனிமைப்படுத்தப்பட்டும், 117 பேர் அறிகுறிகளோடு மருத்துவ சிகிச்சை யிலும் உள்ளனர். இந்நிலையில் கள்ளக்குறிச்சி நகரை ஒட்டி சிறுவங்கூரில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை கூடுதலாக தனிமைப்ப டுத்தப்பட்ட மையமாக மாற்றி அதற்கான பணிகள் நிறைவடை யக்கூடிய நிலையில் உள்ளன. எனவே, தொடர்ந்து தொற்று அதிகரித்து வரும் நிலையில் மாவட்ட தலைமை மருத்துவ மனைக்கு கூடுதல் வென்டிலேட்டர் கள், படுக்கை வசதிகள், சிறப்பு மருத்துவர்கள், மருத்துவப் பணி யாளர்கள் ஏற்படுத்திட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வேலூரில் இறைச்சிக்கடைகளை திறக்க புதிய கட்டுப்பாடுகள்
வேலூர், ஜூலை 3- வேலூர் மாவட்டத்தில் இறைச்சிக் கடை களை திறக்க ஆட்சியர் சண்முகசுந்தரம் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளார். வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் விதமாக இறைச்சி, மீன் கடைகள் திங்கள், புதன், சனிக்கிழமைகளில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டும் இயங்க வேண்டும். மற்ற நாட்களில் விற்பனை செய்யக்கூடாது என்று ஆட்சியர் கடந்த 1ஆம் தேதி தெரிவித்தார். இந்நிலையில் வேலூர் சத்துவாச்சாரி, சைதாப்பேட்டை பகுதிகளில் ஓட்டல்க ளுக்காக கோழிக்கறி வெட்டிய இறைச்சிக் கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் அபராதம் விதித்தனர். மேலும் அங்கிருந்த கோழிக்கறிகளும் அழிக்கப்பட்டன. இதையடுத்து வேலூர் மாவட்ட கறிக்கோழி விற்பனையாளர்கள் சங்க நிர்வாகிகள், ஆட்சியரை நேரில் சந்திந்து கூடு தல் நேரம் கடைகளை திறக்க அனுமதிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட சில கோரிக்கை களை முன்வைத்தனர். இதுதொடர்பாக மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் பிரவேஷ்குமார், வருவாய்த்துறையினருடன் ஆட்சியர் ஆலோசனை நடத்தினார். இந்நிலை யில் மாவட்டம் முழுவதும் இறைச்சிக்கடை களை திறப்பது தொடர்பாக புதிய கட்டுப்பாடு களை ஆட்சியர் விதித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மாவட்டம் முழுவதும் இறைச்சிக்கடை கள் திங்கள், புதன், சனிக்கிழமைகளில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை என்பதற்கு பதிலாக திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில் காலை 5 மணி முதல் மாலை 6 மணி வரை இறைச்சிக் கடை கள் திறக்க அனுமதி அளிக்கப்படுகிறது. மீன்மார்க்கெட்டுகள் ஏற்கனவே அறிவித்தப் படி சனிக்கிழமை மட்டும் இயங்கும். அதைத்தவிர செவ்வாய், வியாழன், சனிக்கிழமைகளில் இறைச்சிக்கடைகள் காலை 5 மணி முதல் காலை 7 மணி வரை ஓட்டல்களுக்கு சிக்கன், மட்டன் வழங்குவ தற்காக மட்டும் இயங்க அனுமதிக்கப்படு கிறது. ஓட்டல்களை தவிர தனிநபர்களுக்கு விற்பனை செய்ய அனுமதி கிடையாது. இது, இறைச்சி மொத்த விற்பனை கடைகளுக்கு மட்டுமே பொருந்தும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
என்எல்சி விபத்து: பலி 7 ஆக உயர்வு
கடலூர், ஜூலை 3- என்எல்சி-யில் பாய்லர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் உயிரி ழந்தோர் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது. நெய்வேலி என்எல்சியில் 2வது அனல்மின்நிலையத்தில் ஏற்பட்ட விபத்தில் 6 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே கருகி உயிரி ழந்தனர். படுகாயமடைந்த 17 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டனர். இவர்களில் 16 பேர் சென்னை அப்பல்லோ மருத்துவமனை யில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில் சிவகுமார் என்ற நிரந்தரத் தொழிலாளி சிகிச்சை பலனின்றி வெள்ளியன்று (ஜூலை 3) உயிரிழந்தார். இதையடுத்து உயிரிழந்தோரின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்தது.