tamilnadu

img

தமிழகத்தின் 4 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

சென்னை:
நாகை, கடலூர், மயிலாடுதுறை, தஞ்சை ஆகிய 4 மாவட்டங்களில் அடுத்த 48 மணி நேரத்தில் இடியுடன் கூடிய கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.குமரிக்கடல் மற்றும் இலங்கையை ஒட்டி நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக 4 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழையும், ஏனைய கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியின் அநேக இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழையும், உள் மாவட்டங்களின் அனேக இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும் என்று வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.சென்னை நகரின் ஒருசில பகுதிகளில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் 10 சென்டிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.

;