tamilnadu

சிமெண்ட், எம் சாண்ட், மணல் விலை உயர்வு

சென்னை, மே 9- கொரோனா பரவலை தடுக்கும் வகையில் நாடு  முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து அத்தியாவசிய பணிகளைத் தவிர அனைத்து பணிகளுக்கும் தடை விதிக்கப்பட்டிருந்தன. சமீபத்தில் மத்திய  அரசு கட்டுமானப் பனிகள் உள்ளிட்ட சில பணிகளை மேற்கொள்ள தளர்வு  அளித்தது. இந்நிலையில் சிமெண்ட், கருங்கற்களை உடைத்து தயாரிக்கப்படும் எம்சாண்ட் விலை தற்போது திடீரென உயர்த்தப்பட்டுள்ளது. இதுகுறித்து, இந்திய கட்டுனர் வல்லுனர் சங்க  நிர்வாகிகள் கூறுகையில், ஊரடங்கு அறிவிக்கப்படுவதற்கு முன்பு 50 கிலோ அடங்கிய ஒரு மூட்டை சிமெண்ட், 360 - 400 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. தற்போது  ஒரு மூட்டைக்கு 80 ரூபாய் உயர்ந்து 440 முதல் 480 ரூபாய் வரை அதிகரித்துள்ளது. அதேபோல் 100 கன அடி யூனிட் எம்சாண்ட் ஊர டங்கிற்கு முன்பு 6 ஆயிரத்து 500 ரூபாயாக இருந்தது.  தற்போது, 7 ஆயிரம் ரூபாயாக உயர்ந்துள்ளது. இதை யடுத்து, எரி சாம்பல் கற்கள், ஹாலொ பிளாக்குகள், சாலிட் பிளாக்குகள் விலையையும் உயர்த்துவது குறித்து உற்பத்தியாளர்கள் யோசித்து வருகின்றனர். தமிழக அரசு பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி யதே இதற்கு காரணம் என உற்பத்தியாளர்கள் கூறுகின்ற னர். எனவே தமிழக அரசு உடனடியாக தலையிட்டு விலை  உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.