சென்னை, ஜூலை 6- பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங் (47), வெள்ளிக்கிழமையன்று இரவு செள் ளையில் கொடூரமான முறையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மாநிலத்தில் பெரும் அதிர்ச்சி யை ஏற்படுத்தியுள்ளது.
வழக்கறிஞரான கே. ஆம்ஸ்ட்ராங், அம்பேத்கரியம், பெரியாரியம், மார்க்சி யம், பவுத்தம் சார்ந்த கொள்கைகளோடு அடையாளப்படுத்திக் கொண்டவர். மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக செயல்பட்டு வந்த அவர், தலித் மாண வர்களின் கல்வி சார்ந்த நடவடிக்கை களில் அக்கறை கொண்டவர் என்று தலித் இயக்கங்களால் பாராட்டப் பெற்ற வர்.
இந்நிலையில், அவர் சென்னை பெரம்பூர் வேணுகோபால் சாமி கோவில் தெருவில், புதிதாக கட்டி வரும் வீட்டின் முன்பு வெள்ளிக்கிழமை (ஜூலை 5) இரவு சுமார் 7 மணி அளவில் தனது நண்பர்களுடன் பேசிக் கொண்டி ருந்துள்ளார். அப்போது, உணவு டெலி வரி ஊழியர்கள் போல, 3 இருசக்கர வாக னங்களில் வந்த கும்பல், திடீரென பயங்கர ஆயுதங்களுடன் ஆம்ஸ்ட் ராங்கை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி யது. தடுக்க முயன்ற அவரது நண்பர்கள் 2 பேருக்கும் அரிவாள் வெட்டு விழுந் தது.
ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஆம்ஸ்ட் ராங்கை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஆம்ஸ்ட்ராங் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இந்த தகவல் காட்டுத் தீ போல் பர விய நிலையில், அந்தப் பகுதியில் ஏரா ளமானவர்கள் குவியத் தொடங்கினர். இதையடுத்து, காவல்துறை உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். சம்பவ இடத்தில் கைப்பற்றப்பட்ட சிசிடிவி காட்சிகளை சேகரித்து விசாரணையை தீவிரப் படுத்தினர். மேலும் அசம்பாவிதம் சம்ப வங்களைத் தவிர்க்க பெரம்பூர், செம்பி யம் உள்ளிட்ட பகுதிகளை முழுமை யாக தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
கொலை நடந்த 4 மணி நேரத்திற் குள், இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பி புன்னை பாலா உட்பட 8 பேர் சரணடைந்த நிலை யில், உண்மையான குற்றவாளிகளைக் கைது செய்ய வேண்டும் என்று பகு ஜன் சமாஜ் கட்சித் தொண்டர்கள், சென் னையில் பல்வேறு இடங்களில் போராட் டங்களில் ஈடுபட்டனர்.
8 பேர் கைது
மேலும், 10 தனிப்படைகளை அமைத்து குற்றவாளிகளை போலீசார் தேடி வந்த நிலையில், அன்று இரவே அண்ணாநகர் துணை ஆணையர் முன்னிலையில் காட்பாடி பகுதியைச் சேர்ந்த ஆற்காடு சுரேஷின் தம்பி பாலு, ராமு, திருவேங்கடம், திருமலை, செல்வராஜ், மணிவண்ணன், சந் தோஷ், அருள் ஆகிய 8 பேர் சரண டைந்தனர்.
பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷ் கடந்த ஆண்டு பட்டினப்பாக்கத்தில் படு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் ஆம்ஸ்ட்ராங்கிற்கு தொடர்பு உள்ள தாக கருதி, அவரை பழிக்குப் பழி நட வடிக்கையாக கொலை செய்தோம் என்று சரணடைந்தவர்கள் வாக்கு மூலம் அளித்திருப்பதாக கூறப்படு கிறது.
இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்ற வாளிகளுக்கு கடும் தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்று காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மதிமுக, விசிக, மநீம, அதிமுக, தேமுதிக, பாஜக, பாமக, தவெக உள்ளிட்ட கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.
பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் இரங்கல் தெரிவித்து செய்தி வெளியிட்டுள்ளனர்.
முதல்வர் உறுதி
இதையடுத்து, ஆம்ஸ்ட்ராங் படு கொலை குறித்து தனது எக்ஸ் பக்கத் தில் பதிவிட்ட முதல்வர் மு.க. ஸ்டா லின், “பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை யும் பெரும் வருத்தத்தையும் அளிக்கி றது. ஆம்ஸ்ட்ராங்கை இழந்து வாடும் அவரது கட்சியினர், குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் என அனை வருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை யும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள் கிறேன்.
இந்த வழக்கை விரைவாக நடத்தி, குற்றவாளிகளுக்கு சட்டப்படி உரிய தண்டனை பெற்றுத்தர காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்” என்று குறிப்பிட்டார்.
உளவுத்துறை எச்சரிக்கை
இதனிடையே ஆம்ஸ்ட்ராங்கின் உயிருக்கு ஆபத்து இருந்ததாக உள வுத்துறையும், ஒருங்கிணைந்த குற் றப்புலனாய்வு பிரிவும் 3 முறை எச்ச ரிக்கை விடுத்திருந்ததாகவும், உளவுத் துறையின் எச்சரிக்கையை செம்பியம் போலீசார் கண்டு கொள்ளவில்லை என் றும் தகவல் வெளியாகியுள்ளது.
எப்போதும் ஆதரவாளர்கள் உடன் இருக்கும் ஆம்ஸ்ட்ராங் தனியாக இருக்கும் நேரத்தை கொலை கும்பல் கண்காணித்து வந்து, இந்த படுகொலை யை அரங்கேற்றியிருப்பதாக கூறப் படுகிறது.
தொல்.திருமாவளவன் பேட்டி
முன்னதாக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு சென்று ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்திய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவள வன், காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வப்பெருந்தகை ஆகியோர் அங்கு செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது, ஆம்ஸ்ட்ராங் உடலை பொதுமக்களின் பார்வைக்கு வைப்ப தற்கு அரசு அனுமதி கொடுத்துள்ளது என்றும் அவருடைய உடலை சொந்த இடத்தில், பட்டா நிலத்தில் அவரது கட்சி அலுவலகத்தின் வளாகத்திற்குள் அடக் கம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளோம். இதையும் அரசு பரிசீலிக்க வேண்டும்” என்றார்.
இந்த படுகொலை சம்பவத்தில் சர ணடைந்திருப்பவர்கள் உண்மையான குற்றவாளிகள் அல்ல. கொலையில் சம்பந்தப்பட்டவர்கள், அவர்களை தூண்டி விட்டவர்கள் உள் ளிட்ட அனை வரையும் கைது செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கும் கோரிக்கை விடுத்தனர்.
காவல்துறை ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர், செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “ஆம்ஸ்ட்ராங் அர சியல் அல்லது சாதி காரணங்களுக்காக கொலை செய்யப்படவில்லை” என்று தெரிவித்துள்ளார்.