tamilnadu

img

பலி வாங்க காத்திருக்கும் அத்திப்பட்டு சாலை

அம்பத்தூர், ஆக.5- அம்பத்தூர் அத்திப்பட்டி லிருந்து, அம்பத்தூர் தொழிற்பேட்டைக்குச் செல்லும் சாலை முற்றிலு மாக பழுதடைந்து குண்டும் குழியுமாக காட்சிய ளிக்கிறது. அம்பத்தூர் அருகே உள்ள அயப்பாக்கம், எம்.ஜி.ஆர்.புரம், அயப்பாக்கம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு, ஐய்யப்பா நகர், செல்லியம்மன் நகர், ஐசிஎப் காலனி, கலைவானர் நகர், பாரதிதாசன் நகர், தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பேஸ் 1, 2, 3 அத்திப்பட்டு ஆகிய பகுதி களில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கிறார்கள். இவர்கள் அம்பத்தூர் தொழிற்பேட்டை, அண்ணா நகர் ஆகிய பகுதிகளுக்கு செல்ல வேண்டும் என்றால், அத்திப்பட்டு அரசு பள்ளிக்கு எதிரே உள்ள சாலை வழியாகத்தான் செல்ல வேண்டும். ஆனால் இந்த சாலை பல மாதங்களாக பராமரிக்கப்படாமல் குண்டும் குழியுமாக உள்ளது. மேலும், இரவு நேரங்களில் சரியான மின் விளக்கு வசதியில்லாததால் வயதான வர்கள், வாகன ஓட்டிகள் அடிக்கடி பள்ளத்தில் விழுந்து காயமடைவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்ற னர். அதேபோல் மழைநீர் வடிகால் வசதி இல்லாத தால், மழைநீர் வெளியேற வழியில்லாமல் சாலையி லேயே தண்ணீர் தேங்கி நிற்கிறது.  தினசரி ஆயிரக்கண க்கான தொழிலாளர்களும், வாகன் ஓட்டிகளும் இந்த சாலையை பயன்படுத்து கின்றனர். குறிப்பாக கனரக வாகனங்கள் இரவு பகல் பாராது அதிகளவில் செல்வதால், சாலை தொடர்ந்து பழுதடைந்து வருகிறது. பலமுறை மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்க வில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்ற னர்.  பள்ளிக்குச் செல்லும் மாணவ மாணவிகள், பொது மக்கள் நடந்து கூட செல்ல முடியாத நிலையில் உள்ளது. எனவே மாநக ராட்சி நிர்வாகம் உடனடி யாக சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்குமா?