சென்னை, மே 6- தமிழக காவல்துறை இயக்குநர் (டிஜிபி) அலுவலகத்தில் புதனன்று (மே 6) 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய் யப்பட்டது. டிஜிபி அலுவலகத்தில் பணியாற்றிய 2 உளவுத் துறை காவலர்களை தொடர்ந்து மேலும் சிலருக்கு தொற்று பரவியது, மேலும் 8 பேருக்கு உறுதி செய்யப்பட்ட நிலையில் மொத்தத்தில் பாதிப்பு எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் டிஜிபி அலுவலகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப் பட்டுள்ளது. டிஜிபி அலுவலக வாயிலில் அனைவருக்கும் முறையான சோதனை நடத்தப்படுகிறது. கிருமிநாசினியால் கைகளை சுந்தம் செய்த பிறகே அலுவ லகத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றனர். அலுவலகத்திற்கு வரும் வாகனங்களும் முழுமையாக கிருமி நாசினி தெளிக்கப்பட்டு அனுமதிக்கப்படுகிறது.
அச்சத்தில் அமைச்சு பணியாளர்கள்
ஆணையர், ஆய்வாளர், உதவி ஆய்வா ளர், அமைச்சுப் பணியாளர்கள், உளவுத் துறை காவலர்கள் என கொரோனா தொற்று பரவி வருகிறது. இதனால் டிஜிபி அலுவல கம், பெருநகர சென்னை மாநகரா காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் பணி புரியும் அமைச்சு பணியாளர்கள் அச்சம டைந்துள்ளனர். அமைச்சுப் பணியாளர் ஒருவர் குறிப்பிடு கையில், கொரோனா தடுப்பு பணியில் காவ லர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனால் டிஜிபி, சென்னை ஆணையர் அலுவலகங்களில் பணி புரியும் அமைச்சுப் பணியாளர்களுக்கு வேலை வெகுவாக குறைந்துள்ளது. ஆனால் தினசரி அலுவலகத்திற்கு வரச் சொல்கின்ற னர். இதற்கு பதிலாக சுழற்சி முறையில் ஆட்களை பணி செய்ய அனுமதிக்க வேண்டும் என்றார்.
திருவல்லிக்கேணி
திருவல்லிக்கேணி வி.ஆர்.பிள்ளை தெருவில் மட்டும் இதுவரை 88 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் புதனன்று (மே 6) 43 பேருக்கு தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது. இதில் 31 பேர் கோயம்பேடு கோயம்பேடு சந்தையோடு தொடர்புடை யவர்கள். இவர்களில் பெரும்பாலானோர் சென்னை அருகே உள்ள குன்றத்தூர் மற்றும் மாங்காடு பகுதியை சேர்ந்தவர்கள். காஞ்சிபுரத்தில் மொத்தத்தில் 85 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.