tamilnadu

கொரோனா மையங்களாக மாறும் 47 கல்லூரிகள்

சென்னை, மே 30 - சென்னையில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால் 47 கல்லூரி களை கொரோனா சிகிச்சை மையங்களாக மாற்ற அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். சென்னையில் கொரோனா வைரஸ் பர வல் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. தற்போது அரசு  மருத்துவமனைகளை தாண்டி பல்வேறு கல்லூரிகள், அரங்குகள், திருமண மண்ட பங்கள் உள்ளிட்டவையும் கொரோனா சிகிச்சை, தனிமைப்படுத்தும் மையங்களாக செயல்பட்டு வருகின்றன. சென்னையில் 13 ஆயிரத்து 980 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். திரு.வி.க.நகர், அண்ணாநகர், ராயபுரம், தண்டையார் பேட்டை, தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கொரோனா பரவல் அதிகமாக உள்ளது.

கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு  நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக 8 மண்ட லங்களில்  பாதிப்பு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்நிலையில் இந்திய மருத்துவ  ஆராய்ச்சிக் கழகம் சென்னையில் 2 லட்சம்  பேர் வரை கொரோனா தொற்றால பாதிக்கப்படுவார்கள் என்று எச்சரித்துள்ளது. எனவே, சென்னையில் உள்ள 47 கல்லூரி களை புதிதாக கொரோனா சிகிச்சை மையங்க ளாக மாற்ற அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இந்த கல்லூரிகளில் சுமார் 13ஆயிரம் படுக்கைகள் அமைப்பதற்கான பணிகளை அதிகாரிகள் முடுக்கிவிட்டுள்ளனர். தற்போது 28 தனியார் இடங்களிலும், 19 அரசு  அலுவலக கட்டிடங்களிலும் கொரோனா மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

சென்னை புளியந்தோப்பு கேசவப்  பிள்ளை பூங்கா பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றும் கொரோனா மையமாக மாற்றப்பட்டு வருகிறது. இதற்கான பணி களை மாநகராட்சி அதிகாரிகள் தீவிரமாக மேற்கொண்டுள்ளனர். இந்த மையத்தில் 1728 கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை  அளிக்க முடியும். இதுதயாராகி விட்டால் சென்னையிலேயே மிகப்பெரிய கொரோனா சிகிச்சை மையமாக இது இருக்கும்.