சென்னை, ஜூன் 5- ரயிலில் ரூ.4 கோடி கடத்தப் பட்ட விவகாரத்தில், பாஜக மாநி லத் துணைத் தலைவர் நயினார் நாகேந்திரனின் ஹோட்டல் ஊழியர்கள் மீது போடப்பட்ட வழக்கை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.
மக்களவைத் தேர்தலின் போது, வாக்காளர்களுக்கு கொடுப் பதற்காக கொண்டு செல்லப் பட்டதாக கூறப்படும் சுமார் 4 கோடி ரூபாய் பணத்தை தாம்ப ரம் ரயில் நிலையத்தில் பறி முதல் செய்து சிபிசிஐடி போலீ சார் விசாரித்து வருகின்றனர்.
இதுதொடர்பாக பாஜக மாநி லத் துணைத்தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான ‘புளூ டைமண்ட்’ ஹோட்டல் ஊழியர்கள் எஸ். சதீஷ், எஸ். நவீன், எஸ். பெருமாள் ஆகிய மூன்று பேர் கைது செய்யப்பட்டு, பின்னர் சொந்த ஜாமீனில் விடு விக்கப்பட்டனர்.
இந்த வழக்கில் நேரில் ஆஜ ராகி விளக்கம் அளிக்கும்படி ஹோட்டல் ஊழியர்கள் சதீஷ், நவீன், பெருமாள் ஆகிய மூன்று பேருக்கு காவல்துறை சம்மன் அனுப்பியது.
இந்நிலையில், தங்களுக் கான சம்மனை எதிர்த்து மூன்று பேரும் சென்னை உயர் நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்த னர். இந்த வழக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு புத னன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் சார்பில் ஆஜ ரான வழக்கறிஞர், உரிய விதி முறைகளைப் பின்பற்றாமல், விதிமுறைகளுக்கு புறம்பாக சம்மன் வழங்கப்பட்டிருப்பதாக வும், சம்மனுக்கு தடை விதிப்ப துடன், வழக்கையே ரத்து செய்ய வேண்டும் என வாதிட்டார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சிபிசிஐடி போலீசார், உரிய சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டுத் தான் மனுதாரர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டு இருப்பதாகவும் சம்மனுக்கு தடை விதிக்கப் பட்டால் விசாரணை பாதிக்கப் படும் என்றும் கூறினர்.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, தற்போதைய நிலையில் வழக்கின் விசாரணைக்கு தடை விதித்தாலும், சம்மனை ரத்து செய்தாலும் வழக்கு விசார ணைக்கு பாதிப்பை ஏற்படுத் தும் என்பதால் தற்போதைய நிலையில் எந்த தடை உத்தரவும் பிறப்பிக்க முடியாது என தெரி வித்தார்.
மேலும் மனுதாரர்கள் விசா ரணைக்கு நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு மனுவை தள்ளு படி செய்து உத்தரவிட்டார்.
சிபிசிஐடி அலுவலகத்தில் கேசவ விநாயகம் ஆஜர்
ரூ.4 கோடி கடத்தப்பட்ட வழக்கில் பாஜகவின் தமிழ்நாடு அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகத்திற்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியிருந்தனர். ஆனால் விசாரணைக்கு ஆஜராகாமல் டிமிக்கி கொடுத்து வந்த கேசவ விநாயகம், தன் மீதான விசாரணைக்குத் தடை கேட்டு நீதிமன்றத்திற்கு ஓடினார். ஆனால், விசாரணைக்குத் தடை விதிக்க முடியாது என்று நீதிமன்றம் கூறிவிட்டது.
இதனால் பாஜக மாநில அமைப்பு செயலாளர் கேசவ விநா யகம், புதனன்று (ஜூன் 5) சென்னை எழும்பூரில் உள்ள சிபி சிஐடி அலுவலகத்தில் ஆஜரானார். இந்த வழக்கில் இதுவரை 15-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.