tamilnadu

img

சொந்த ஊர் செல்ல 35,140 பேர் முன்பதிவு!

தீபாவளிக்கு சொந்த ஊர் செல்வதற்காக அரசு பேருந்துகளில் நேற்று(04.09.24) ஒரே நாளில் 35,140 பேர் ஆன்லைனில் முன்பதிவு செய்துள்ளனர்.

தீபாவளி, பொங்கல், ரம்ஜான் உள்ளிட்ட விஷேச நாட்களில் வெளி ஊர்களில் உள்ள மற்ற மாவட்ட மக்கள், தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். அதற்கு வசதியாக தமிழ்நாடு அரசும், மக்கள் சிரமமின்றி சென்று வர சிறப்பு பேருந்துகளை ஏற்பாடு செய்து, அதற்கான முன்பதிவையும் முன்கூட்டியே தொடங்கிவிடும். அந்த வகையில், வருகிற அக்டோபர் 31ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளதால், சொந்த ஊர் செல்லக் கூடியவர்கள் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் பயணம் செய்ய நேற்று (04.09.24) ஒரே நாளில் 35,140 பேர் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்துள்ளனர்.

இதற்கு முன்பு 2018 ஆம் ஆண்டு ஜன.12இல் அதிகபட்சமாக 32,910 பேர் முன்பதிவு செய்திருந்த நிலையில், தற்போது அதை விட அதிக பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர்.