tamilnadu

img

நில மோசடி வழக்கில் பாஜகவைச் சேர்ந்த 3 பேர் கைது

தமிழகத்தில் பாஜகவை சேர்ந்த நிர்வாகிகள் தொடர்ந்து நில மோசடி, ஆருத்ரா கோல்டு நிறுவன மோசடி என பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு கைதாகி வருகின்றனர்.

அந்த வகையில், சென்னை செங்குன்றம் அருகே நில மோசடியில் ஈடுபட்ட பாஜகவைச் சேர்ந்த வெங்கடேசன், நரேஷ் குமார், பிரதீப்குமார் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

செளகார்பேட்டையை சேர்ந்த சுல்தான் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில், பாடியநல்லூரில் சுமார் ரூ.3 கோடி மதிப்புள்ள 23.5 சென்ட் நிலத்தை மோசடி செய்ததாக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தமிழகத்தில் தொடர்ச்சியாக பாஜக நிர்வாகிகள் பல்வேறு குற்றச்சாட்டுகளில் கைதாகி வருவது அக்கட்சியினரை கலக்கம் அடைய செய்துள்ளது.