மருத்துவமனை கட்டமைப்பில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி
கோவை, ஜூன் 15– கோவை அரசு மருத்துவமனை யின் கட்டமைப்பில் இந்த நான்கு ஆண்டு காலத்தில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம் தெரிவித்தார். கோவை அரசு மருத்துவமனை யில், புதுப்பிக்கப்பட்ட மன நல அவ சர சிகிச்சை மற்றும் மீள் மையம், பச்சிளம் குழந்தைகளுக்கான பிரிவு, துணை இனப்பெருக்க மையம் ஆகியவற்றை ஞாயிறன்று அமைச் சர் மா.சுப்பிரமணியம் திறந்து வைத் தார். இதனைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், கடந்த நான்கு ஆண்டுகளில் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்டமைப்பில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எட்டி உள்ளது. குறிப்பாக, ரூ.9.65 கோடி மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் மற்றும் சாலைப் பணிகள் நடை பெற்று வருகிறது. இதுவரை இல் லாத அளவிற்குப் பல புதிய கட்ட மைப்புகள் தற்போது பயன்பாட் டிற்கு வந்துள்ளது. மேற்கு மண் டல மாவட்டங்கள் பயன்பெறும் வகையில் மருத்துவமனையின் உட் கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டு உள்ளதால், நாள்தோறும் வெளிநோ யாளிகளின் எண்ணிக்கை 2,500-லிருந்து 5,000 ஆக அதிகரித்துள் ளது மகிழ்ச்சியளிக்கிறது. புற்று நோயை துல்லியமாகக் கண்டறியும் நவீன கருவி முன்ன தாக இரண்டு இடங்களில் மட்டுமே இருந்த நிலையில், தற்போது கோவை, சேலம், தஞ்சை, நெல்லை, காஞ்சிபுரம் ஆகிய ஐந்து மாவட் டங்களில் புதிய கருவிகள் நிறுவப் பட்டுள்ளது. செயற்கை கருத்த ரிப்பு சிகிச்சைகள் உலக அளவில் அதிகரித்து வரும் சூழலில், தனி யார் மருத்துவமனைகளில் ரூ.10-12 லட்சம் செலவாகும். இச்சிகிச்சை, தற்போது சென்னை எழும்பூர் மற் றும் சேலம் ஆகிய அரசு மருத்துவம னைகளில் ரூ.4-5 லட்சம் செலவில் பரிசோதனை முறையில் தொடங் கப்பட்டு உள்ளது. உலக அளவில் 15% தம்பதியினர் கருத்தரித்தலில் பாதிப்பை எதிர்கொள்கின்றனர். இந்தச் சூழலில், முதல் முறை யாக கோவையில் முதல் நிலை கருத்தரித்தல் மையம் திறக்கப்பட் டுள்ளது, ஒரு மைல் கல். நீட் தேர்வு மற்றும் மாணவர்க ளுக்கான வழிகாட்டுதல் பற்றிய கேள்விக்கு, நீட் தேர்வுக்கு விலக்கு அளித்து தீர்வு காண்பதற்காக தமி ழக முதலமைச்சர் பல்வேறு சட்ட மற்றும் மக்கள் போராட்டங்களை முன்னெடுத்து வருவதாக தெரிவித் தார். மேலும், அண்மையில் நடை பெற்ற நீட் தேர்வில் 1,35,716 பேர் பங்கேற்றதில், 76,181 மாணவர் கள் தகுதி பெற்றுள்ளனர். நாடு முழுவதும் முதல் 100 இடங்க ளில் ஆறு பேர் தமிழகத்தைச் சேர்ந் தவர்கள் என்பது மாநிலத்திற்குப் பெருமை. மருத்துவத்துறையில் காலிப்பணியிடங்கள் நிரப்புவது குறித்த கேள்விக்கு, மருத்துவத் துறையில் பற்றாக்குறை இல்லா மல் பணி இடங்கள் நிரப்பப்பட்டு வருவதாகவும், மேலும் 9,000 புதிய பணியிடங்கள் உருவாக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார். முன்னதாக, இந்நிகழ்வில் ஆட்சியர் பவன்குமார், கணபதி ராஜ்குமார் எம்.பி., மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன், மருத்துவக்கல்லூரி மருத்துவ மனை முதல்வர் நிர்மலா உட்பட பலர் கலந்து கொண்டனர்.