தரைப்பாலத்தை சீரமைக்க கோரிக்கை
சேலம், ஜூன் 15- சேலத்தில் பெய்த பலத்த மழையால் சேதமடைந்த தரைப் பாலத்தை உடனடியாக சீரமைக்க வேண்டும், என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சேலம் மாவட்டம், கந்தம்பட்டி பகுதியிலுள்ள ராஜீவ் காந்தி நகரில் குடோன்கள், மாட்டு தீவன ஆலை, டயர் தயாரிக்கும் தொழிற்சாலை உள்பட பல்வேறு தொழில் நிறு வனங்கள் செயல்பட்டு வருகின்றன. மேலும், வெல்ல மண்டி, பருப்பு மற்றும் பொருள்கள் வைக்கும் குடோன்க ளும் அதிகளவில் உள்ளன. 500க்கும் மேற்பட்ட குடியிருப்பு கள், பள்ளிகளும் இப்பகுதியில் செயல்படுகின்றன. மூலப் பிள்ளையார் கோவிலில் இருந்து கந்தம்பட்டியை இணைக் கும் தரைப்பாலத்தை அப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த பலத்த மழையால் இந்த தரைப் பாலம் கடுமையாக சேதமடைந்தது. அதன் காரணமாக, அவ்வழியாக செல்லும் பள்ளி குழந்தைகள், பணிக்கு செல் வோர், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்குள்ளாகி வரு கின்றனர். தரைப்பாலத்தை கடப்பதற்கு மாற்றாக மூலப் பிள்ளையார் கோவிலில் இருந்து கந்தம்பட்டி மேம்பாலம் வழியாக 2 கி.மீ சுற்றிவரும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, மாநகராட்சி நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் தரைப் பாலத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பேக்கரியில் சாப்பிட்ட குழந்தைக்கு வாந்தி உணவு பாதுகாப்புத்துறையினர் விசாரணை
நாமக்கல், ஜூன் 15- குமாரபாளையம் அருகே உள்ள பேக்கரியில் வாங்கிய உணவை சாப்பிட்ட மூன்று வயது குழந்தைக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது குறித்து உணவு பாதுகாப்புத்துறை அதி காரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அருகே உள்ள குளத்துக்காடு பகுதியில் இயங்கி வரும் பேக்கரியில், வெள்ளி யன்று மாலை, அதேபகுதியைச் சேர்ந்த செல்வக்குமார் (வழக்கறிஞர்) தனது குழந்தைக்காக ஸ்வீட் பப்ஸ் வாங்கி சென்றார். அதனை சாப்பிட்டவுடன் குழந்தைக்கு திடீரென வாந்தி ஏற்பட்டது. உடனடியாக குழந்தையை தனியார் மருத் துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்த பொழுது, மருத்துவர் கூறிய அறிவுரையின்படி, ஸ்வீட் பப்ஸ்சை பிரித் துப் பார்த்தபொழுது, அது கெட்டுப்போனது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த செல்வகுமார் தனது நண்பர்களு டன் உடனடியாக பேக்கரிக்கு சென்று கேட்ட பொழுது, அதன் உரிமையாளர் அதனை மறுத்ததுடன், ஸ்வீட் பப்ஸ் இங்கு பெறவில்லை என கூறியுள்ளார். அப்போது செல்வக்குமார், அங்கிருந்த ஸ்வீட் பப்ஸ்களை ஆய்வு செய்து பொழுது, அவை அனைத்தும் கெட்டுப் போனது தெரியவந்தது. இது குறித்த தகவலின்பேரில், உணவு பாதுகாப்புத்துறை அலுவ லர் ரங்கநாதன் தலைமையிலான அதிகாரிகள், பேக்கரி யில் ஆய்வு செய்ததுடன், அவற்றின் மாதிரிகளை பரிசோத னைக்காக எடுத்துக் கொண்டு, பேக்கரியை பூட்டியதுடன் அபராதம் விதித்தனர்.
சிறுவாணி அணை நீர்மட்டம் உயர்வுகோவையின் குடிநீர் ஆதாரத்திற்கு புத்துயிர்
கோவை, ஜூன் 15 – மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் கனமழையின் காரணமாக, கோவை மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதா ரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. இதன் காரண மாக கேரள மாநிலத்தில் அமைந்துள்ள சிறு வாணி அணைக்கான நீர்வரத்து அதிகரித்து தற்போது 41.00 அடி நீர்மட்டத்துடன் காணப் படுகிறது. அணையின் அடிவாரத்தில் 28 மி.மீ. மழையும், அணைகட்டு பகுதியில் 70 மி.மீ. மழையும் பதிவாகியுள்ளது. இந்தத் தொடர் மழைப்பொழிவு, அணையின் நீர்வரத்தை அதிகரித்து, அதன் கொள்ளளவை நோக்கி நகர்த்தியுள்ளது. சிறுவாணி அணையின் மொத்த கொள்ளளவு 44.61 அடியாகும். தற் போது நீர்மட்டம் 41.00 அடியாக உயர்ந்துள்ள நிலையில், அணை அதன் முழு கொள்ள ளவை எட்டும் நிலையில் உள்ளது. கோவை மாநகர மக்களின் தினசரி குடிநீர் தேவைக் காக 101.40 மில்லியன் லிட்டர் தண்ணீர் விநி யோகிக்கப்பட வேண்டும். தற்போது, அணை யில் இருந்து 96.22 மில்லியன் லிட்டர் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. நீர்மட்டம் மேலும் உயரும் பட்சத்தில், குடிநீர் விநியோகம் முழு மையாக சீரடையும் என எதிர்பார்க்கப்படு கிறது. சிறுவாணி அணையின் நீர்மட்டம் விரை வில் முழு கொள்ளளவை எட்டும் என்ற எதிர் பார்ப்பில் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அணை நிரம்பு வது, கோவை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளின் விவசாயத்திற்கும், குடிநீர் தேவைக்கும் பெரும் பயன் அளிக்கும். கடந்த சில மாதங்களாக நிலவிய வறட்சியின் காரண மாக குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டு வந்த நிலையில், இந்த நீர்மட்ட உயர்வு மகிழ்ச் சியை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம், நல்லிபாளையம் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் ஞாயிறன்று நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 1, 1ஏ தேர்வு குறித்து மாவட்ட ஆட்சியர் ச.உமா ஆய்வு மேற்கொண்டார்.