tamilnadu

img

வடக்கு தாலுகா பொதுத்தொழிலாளர் சங்க மாநாடு

வடக்கு தாலுகா பொதுத்தொழிலாளர் சங்க மாநாடு

கோவை, ஜூன் 15– நரசிம்மன்நாயக்கன்பாளையம் பகுதியில் பால்வாடி பள்ளி அமைக்க வேண்டும் என வடக்கு தாலுகா பொதுத் தொழிலாளர் சங்க மாநாடு வலியுறுத்தி உள்ளது. சிஐடியு கோவை வடக்கு தாலுகா பொது தொழிலாளர் சங்கத்தின் 8  ஆவது மகாசபை தலைவர் என்.சிவரா ஜன் தலைமையில் ஞாயிறன்று நடை பெற்றது. கோவை பெரியநாயக்கன் பாளையத்தில், தோழர் கே.ஜெயராஜ் நினைவரங்கத்தில் நடைபெற்ற மகா சபையில் சங்க துணைத்தலைவர் என். பாலமூர்த்தி கொடியேற்றினார். துணைச் செயலாளர் கே.வெங்கிடசாமி வரவேற் றார். சிஐடியு மாவட்டத் தலைவர் கே. மனோகரன் துவக்கி வைத்தார். சங் கத்தின் பொதுச் செயலாளர் ஆர்.கேசவ மணி வேலை அறிக்கையும், பொருளா ளர் வி.தேவராஜ் வரவு செலவு அறிக் கையும் முன்வைத்தனர்.  இதில், நரசிம்ம நாயக்கம்பாளை யம் பேரூராட்சியில் பால்வாடி பள்ளி அமைக்க வேண்டும். குருடம்பளையம் ஊராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்த வேண்டும். பெரியநாயக்கன் பாளையம் பகுதியில் கேபிள் பதிக்க தோண்டப்பட்ட பள்ளங் களால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இப்பணிகளை உடனடியாக முடிக்க வேண்டும், உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாகசபையில், சங்கத்தின் தலைவ ராக ஆர்.கேசவமணி, பொதுச்செயலா ளராக என்.சிவராஜ், பொருளாளர் வி. தேவராஜ் உள்ளிட்ட 20 பேர் கொண்ட நிர்வாகக்குழு தேர்வு செய்யப்பட்டது. சிஐடியு மாவட்டச் செயலாளர் எஸ். கிருஷ்ணமூர்த்தி நிறைவுரையாற்றி னார். முன்னதாக, கோவையில் நடை பெற உள்ள சிஐடியு மாநில மாநாட் டிற்கு ரூ.50 ஆயிரம் நிதி இச்சங்கத் தின் சார்பில் வழங்கப்பட்டது. அப் போது அபகரிக்கப்பட்ட  சலவை தொழி லாளியின் 80 லட்சம் ரூபாய் பெறுமான நிலத்தை மீட்டுக் கொடுத்ததற்காக கோவை வடக்கு தாலுகா பொதுத் தொழிலாளர் சங்க நிர்வாகிகளுக்கு சலவை தொழிலாளியின் குடும்பத்தி னர் நன்றி தெரிவித்தனர். முடிவில், சங் கத்தின் துணைத்தலைவர் ஆர். ரேணுகாதேவி நன்றி கூறினார்.