காலமுறை ஊதியம் வழங்க வலியுறுத்தல்
தருமபுரி, ஏப்.24- காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், என சத்துணவு ஊழியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றிய 16 ஆவது மாநாடு, ஒட் டப்பட்டி சமுதாயகூடத்தில் வியாழனன்று, ஒன்றியத் தலைவர் ஆர்.துரை தலைமையில் நடைபெற்றது. அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் ஏ.தெய்வானை துவக்கவுரையாற்றி னார். ஒன்றியச் செயலாளர் ஆர்.பரிமளா, பொருளாளர் பி.பழ னியம்மாள் ஆகியோர் அறிக்கைகளை முன்வைத்தனர். சங்கத்தின் மாவட்டத் தலைவர் கே.தேவகி, செயலாளர் ஜே. அனுசுயா, பொருளாளர் ஜி.எம்.ராமன், ஜாக்டோ - ஜியோ நிதி காப்பாளர் கே.புகழேந்தி, ஓய்வுபெற்ற சத்துணவு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் சி.காவேரி, அரசு ஊழியர் சங்க மாவட்ட இணைச்செயலாளர் ஆர்.முருகன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். இம்மாநாட்டில், காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். தேர்தல்கால வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யும் அரசாணையை ரத்து செய்ய வேண்டும். குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஓய் வூதியமாக ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும். காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு ஊழியர்களை கொண்டு செயல்படுத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதைத்தொடர்ந்து, சங்கத்தின் ஒன்றியத் தலைவராக ஆர். துரை, செயலாளராக எம்.பரிமளா, பொருளாளராக டி. வசந்தா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். முடிவில், மாநி லச் செயலாளர் பெ.மகேஸ்வரி நிறைவுரையாற்றினார்.
மின் மோட்டார் திருட்டு: 3 பேர் கைது
நாமக்கல், ஏப்.24- பள்ளிபாளையத்தில் மின் மோட்டாரை திருடியதாக 3 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையத்தை அடுத்த அக்ர ஹாரம் பகுதியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு அங்குள்ள ஒரு கடையின் முன்பு வைக்கப்பட்டிருந்த ரூ.5 ஆயிரம் மதிப் புள்ள மின் மோட்டாரை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச் சென்றனர். இதைத்தொடர்ந்து கடையின் உரிமையா ளர் பள்ளிபாளையம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்நி லையில், புதனன்று பள்ளிபாளையம் நான்கு வழிச்சாலை யில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது, அப்ப குதி வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவரை பிடித்து விசாரித்தனர். அவர் முன்னுக்குபின் முர ணாக பதிலளித்ததால், அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர். அதில், அவர் பள்ளிபாளை யம் அக்ரஹாரம் பகுதியில் மின்மோட்டார் திருட்டில் ஈடுபட்ட தும், மேலும் அதேபகுதியைச் சேர்ந்த மணிகன்டன், ஜீவா ஆகி யோர் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்து, குமாரபாளையம் நீதிமன்றத்தில் நேர்நிறுத்தி சேலம் மத்தியசிறையில் அடைத்தனர்.