tamilnadu

img

சிமெண்ட் தொழிலாளர் சங்க மாநாடு

சிமெண்ட் தொழிலாளர் சங்க மாநாடு

கோவை, ஜூன் 15- நலவாரிய பணப்பயன் களை உயர்த்தித்தர வேண் டும் என சிஐடியு கோவை மாவட்ட சிமெண்ட் அண்ட் பொதுத் தொழிலாளர் சங்க  ஆண்டுப் பேரவை வலியுறுத் தியுள்ளது. சிமெண்ட் அண்ட் பொதுத் தொழிலாளர் சங்கத்தின் ஆண்டுப் பேரவை கூட்டம் காமராஜபுரம் பூங்குழலி  மாரியம்மன் மண்டபத்தில் துணைத்தலை வர் என்.செல்வராஜ் தலைமையில் நடை பெற்றது. சிஐடியு மாவட்ட துணைச்செய லாளர் ஆர்.ராஜன்  துவக்கி வைத்தார். சங்க செயலாளர் எம் பஞ்சலிங்கம், பொருளாளர் எம்.ஆனந்தன் ஆகியோர் அறிக்கைகளை முன் வைத்தனர். இக்கூட்டத்தில், பெண்களுக்கு 56 வய தில் பென்சன் வழங்க வேண்டும். பென்சன்  தொகையை ரூ.3000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும். கல்வி உதவித் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும். நலவாரிய ஆன் லைன் பதிவை முறைப்படுத்தப்பட வேண் டும், உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. இச்சங்கத்தின் தலைவராக எம்.சுப்பிர மணியம், செயலாளராக எம். பஞ்சலிங்கம், பொருளாளராக எம்.ஆனந்தன் உள்ளிட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். சிஐ டியு மாவட்ட துணைச்செயலாளர்  ஏ.எம் ரபிக் நிறைவுறையாற்றினார். முடிவில், துணைத் தலைவர் தர்மராஜ் நன்றி கூறினார். இதில் பலர் கலந்து கொண்டனர்.