tamilnadu

img

கோவை: யானை தாக்கி முதியவர் பலி

கோவையில் யானை தாக்கி முதியவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 
கோவை மருதமலை செல்லும் சாலையில் அரசு சட்டக்கல்லூரி அமைந்துள்ளது. அக்கல்லூரியில் செல்வபுரம் பகுதியைச் சேர்ந்த முகமது நியாஸ் வேலை பார்த்து வந்தார். இன்று அதிகாலை 6 மணி அளவில் அவர் டீ கடைக்கு சென்றபோது அங்கு நின்றிருந்த ஒற்றையானை முதியவரை தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் அவரது உடலை கைப்பற்றி கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேதப்பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்
 

;