tamilnadu

img

உலக தாய் மொழி தின கொண்டாட்டம்

இளம்பிள்ளை, பிப்.21- இளம்பிள்ளையில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் வெள்ளியன்று உலக தாய் மொழி தினம் கொண்டாடப்பட்டது.  சேலம் மாவட்டம், இளம்பிள்ளை அருகே உள்ள முருங்கபட்டி அரசு தொடக் கப்பள்ளியில் உலக தாய் மொழி தினம்  தலைமையாசிரியர் சரவணன் தலை மையில் கொண்டாடப்பட்டது. இதில் பள்ளி மாணவ,  மாணவிகள் தமிழ் மொழியை  வளர்க்கவும்,  தமிழ் மொழி காத்த தமிழறி ஞர்களின் புகழை நிலை நிறுத்தச் செய் யவும், தமிழ் மொழி உலக முதல் மொழி யாகத் திகழவும் உறுதியேற்றுக் கொண் டனர். இந்நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள் பூபாலன், சரஸ்வதி, கவிதா, சலேத்மேரி ஆகியோர் கலந்து கொண்டனர்.