இளம்பிள்ளை, பிப்.28- இளம்பிள்ளை அருகே தப்பக்குட்டை அரசு பள்ளி முன்பு தாழ்வான நிலையில் மரத்தில் மோதியவாறு செல்லும் மின்சார கம்பிகளால் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாக பெற்றோர்கள் அச்சமடைந்துள்ளனர். சேலம் மாவட்டம், இளம்பிள்ளை அருகே உள்ள தப்பக் குட்டையில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 200-க்கு மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வரு கின்றனர். இப்பள்ளியின் நுழைவுவாயிலில் மரங்கள் உள்ளன. இந்த மரத்தின் மேல் மின்சார கம்பிகள் உரசிய வாறு செல்கிறது. இதனால் விபத்து ஏற்படும் வாய்ப் புள்ளது. எனவே மின்சார வாரியம் உடனடியாக மின் கம்பிகளை உயர்வான இடத்திற்கு மாற்றி அமைக்க வேண்டுமென பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.