tamilnadu

img

ஈரோடு புத்தகத் திருவிழாவில் ஒரே நாளில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் வருகை

ஈரோடு,ஆக.12- ஈரோட்டில் நடைபெற்ற வரும் புத்தகத் திருவிழாவில் திங்களன்று ஒரே நாளில் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவியர்கள் வருகை தந்தனர். ஈரோடு புத்தகத்திருவிழா கடந்த ஆக.2 ஆம் தேதி துவங்கி யது. கடந்த மூன்று நாட்களாக பள்ளி, கல்லூரி மாணவ, மாண விர்களின் வருகை அதிகரித்தது. பொதுமக்களின் வருகை அதிக ரித்து வந்த நிலையில், புத்தகத் திருவிழாவின் இறுதி நாளான திங்களன்று அதிக அளவில் மாணவ மாணவியர்கள் வந்தி ருந்தனர். மேலும், போடப்பட்ட அனைத்து பதிப்பகங்களிலும் உள்ள, வரலாற்று குறிப்புகள், மருத்துவ சார்ந்த புத்தகங்கள், நாவல்கள், சிறுகதைகள், அரசுத் தேர்வுகளுக்கான புத்தகங்கள், இலக்கியம் சார்ந்த புத்தகங்கள் என அதிக அளவில் வாங்கி சென்றனர். மாணவ, மாணவியர் களுக்கு கழிவு விலையில் புத்த கங்கள் வழங்கப்படுவதால், ஆர் வத்துடன் புத்தகங்களை வாங்கி செல்கிறார்கள். பல அரசுப் பள்ளி களில் படிக்கும் மாணவர்களை ஆசிரியர்களே அவர்கள் செல வில் பேருந்துகளில் அழைத்து வருகிறார்கள். மேலும், இயற்கையை பாது காக்கும் பொருட்டு, பழ வகை யான மரக்கன்றுகளை ஆர்வத் துடன் வாங்கி செல்கிறார்கள். மாணவர்களின் வருகையால், பல பதிப்பகங்களுக்கு விற் பனை அமோகமாக உள்ளதாக சில பதிப்பக விற்பனையாளர் களே கூறுகின்றனர்.

நூலகத்  தந்தை படதிறப்பு

தேசிய நூலகர் தினமான திங்க ளன்று இந்திய நூலகத்தந்தை பத்மஸ்ரீ எஸ்.ஆர்.ரங்கநாதன் அவர்களின் பிறந்தநாளை தேசிய அறிவியல் தினமாக மத்திய அரசு அறிவித்தது. ஆகஸ்ட் 12 ஆம் தேதியன்று பிறந்தநாளில் அவ ரின் படத்திறப்பு நிகழ்வு நடை பெற்றது. மக்கள் சிந்தனை பேரவையின் தலைவர் எஸ்.ஸ்டாலின் குணசேகரன் பங் கேற்று படத்தை திறந்து வைத் தார்.