உடுமலை, செப் 3- உடுமலை அரசு மருத்துவமனை யில் இடநெருக்கடி மற்றும் மருத்து வர்கள் பற்றாக்குறையால் நோயாளி கள் அவதியடைந்து வருகின்றனர். உடுமலை அரசு மருத்துவ மனைக்கு நாள்தோறும் 2,500க் கும் மேற்பட்ட புறநோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்ற னர். 200க்கும் மேற்பட்ட உள் நோயா ளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவமனையில் 224 படுக்கைகள் உள்ளன. 20 சிகிச்சைப் பிரிவுகளில் 26 மருத்துவர்கள், 60 செவிலியர்கள் பணிபுரிந்து வருகின் றனர். அதேநேரம், இம்மருத்துவ மனையில் போதிய அடிப்படை வசதிகள் இல்லாத காரணத்தால் நோயாளிகள், அவர்களது உறவினர் கள் உள்ளிட்ட அனைத்து தரப்பின ரும் பெரும் அவதிக்குள்ளாகி வருகின் றனர். குறிப்பாக, மருத்துவமனைக்கு வருபவர்களின் இருசக்கர வாக னங்கள், மருத்துவர்களின் கார்கள் நிறுத் தப்படுவது போதிய இடவசதி இல்லாமல் நெருக்கடி நிலை காணப் படுகிறது. இதன்காரணமாக அவசர சிகிச்சைக்காக வரும் ஆம்புலன்ஸ் கள் கூட காத்திருக்க வேண்டி உள் ளது. இதனால் உடனடியாக அவசர சிகிச்சை வார்டுக்குச் செல்வதற்கே நோயாளிகள் சிரமப்படுகின்றனர். இதுதவிர மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவிற்கு முன்பும் வாகனங்களை நிறுத்துவதால், நோயாளிகள் கடும் சிரமத்திற்கு இடையே அப்பகுதியைக் கடக்க வேண்டி உள்ளது. இவ்வாறு அரசு மருத்துவமனையில் வாகனங்கள் நிறுத்துவதற்கு போதுமான இடவசதி இல்லாததால் கடும் சிரமம் ஏற்படுகிறது. இதற்கிடையில், மருத்துவ மனைக்கு நாள்தோறும் 2,500க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச் சைக்காக வந்து செல்லும் நிலையில், அவர்களுக்கு சிகிச்சையளிக்க போதுமான மருத்துவர்கள் இல்லை. இருக்கும் மருத்துவர்களில் ஒரு சிலர் விடுப்பு எடுக்கும்போது சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் உடனடியாக சிகிச்சை பெற முடி யாத நிலை ஏற்பட்டு வருகிறது. மேலும் போதிய மருந்தாளுனர்கள் நியமிக்கப்படததால், நோயாளிகள் நீண்ட வரிசையில் மருந்துகள் வாங்க காத்திருக்க வேண்டிய நிலையில் உள்ளது. எனவே நோயாளி களின் எண்ணிக்கையை கணக் கில் கொண்டு உடுமலை அரசு மருத் துவமனைக்கு மருத்துவர்கள், செவி லியர்கள், மருந்தாளுனர்கள் கூடுத லாக நியமனம் செய்ய வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளன. ஆகவே, தமிழக அரசு மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் இடநெருக்கடியில் சிக்கி தவிக்கும் உடுமலை மருத்துவமனைக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் கூடுதல் மருத்து வர்களை நியமிக்க உடனடி நட வடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைத்து தரப்பினரின் எதிர்ப்பார்ப்பாகும்.