வாலிபர் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு
கோவை, நவ.18- கோவையில் அதிமுக கொடிக் கம்பம் சாய்ந்ததால் ஏற்பட்ட விபத்தில் பாதிக்கப்பட்டு கால்களை இழந்த இளம் பெண்ணுக்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க வேண் டும் என வாலிபர் சங்கத்தினர் திங்களன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். இம்மனுவில் கூறியிருப்பதாவது, அவிநாசி சாலை கோல்ட் வின்ஸ் பகுதியில் கடந்த நவ.11 ஆம் தேதி யன்று இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த ராஜேஸ்வரி என்கிற இளம்பெண் மீது அதிமுக கொடிக் கம்பம் விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில் ராஜேஷ்வரி விபத்தில் சிக்கி னார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவருக்கு தற்போது இடது கால் அகற்றப்பட்டுள்ளது. விபத்தில் சிக்கிய அவரது மருத்துவச் செலவுக்கும், அவரது எதிர்காலத்தை கருத்தில் கொண்டும். அவரது குடும்ப சூழலை கணக்கில் கொண்டும் ரூ.25 லட்சம் நிவாரண நிதி வழங்க வேண்டும். இதனை மாவட்ட ஆட்சியர் தமிழக அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும். மேலும், விபத்து நடக்க காரணமாகவும் கவனக்குறைவாக கொடிக் கம்பங்களை அங்கு அமைத்த அப்பகுதி அதிமுக நிர்வாகிகள் மீது உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித் திருந்தனர். முன்னதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வாலிபர் சங்கத்தின் மாவட்ட செய லாளர் கே.எஸ்.கனகராஜ், மாவட்ட நிர்வாகிகள் துரைசங்கர், விவே கானந்தன், மணிபாரதி, ராஜா உள் ளிட்ட நிர்வாகிகள் வந்திருந்தனர்.