கோவை, நவ. 22 – பெண்கள், குழந்தைகள், சிறுமிகள் மீதான பாலியல் வன்முறைகளை தடுத்திட உடனடி நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வலி யுறுத்தி மாதர், வாலிபர், மாணவர் சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ளி யன்று மனு அளித்தனர். கோவை மாவட்டத்தில் சிறுமிகள், குழந்தைகள் மீது நிகழ்த்தப்படும் பாலியல் வன்முறைகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதில் பெரும் பாலான வன்முறைகள் வெளியில் தெரியவருவதில்லை. திட்டமிட்டு மறைக்கப்படுகிறது. வெளிவரும் ஓரிரு சம்பவங்களிலும் காவல்துறை யினர் உரிய நடவடிக்கையை மேற் கொள்வதில்லை என்கிற புகாரும் எழுந்து வருகிறது. ஆகவே, இது போன்று பெண்கள், குழந்தைகள், சிறுமிகள் மீதான பாலியல் வன்முறை களை தடுத்து நிறுத்த, கல்வி நிலை யங்களில் போக்சோ சட்டம் குறித்தும், குட் டச், பேட் டச் குறித்து மாணவர்கள், ஆசிரியர்களுக்கு விழிப்புணர்வு நடவடிக்கை மேற்கொள்ளவும் மாவட்டஅளவிலான குழு அமைக்க வேண்டும். போக்சோ சட்டத்தில் பதியப்படும் வழக்குகளை விரைவில் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என் பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை முன்வைத்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஏ.ராதிகா, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத் தின் மாவட்ட செயலாளர் கே.எஸ்.கனகராஜ், இந்திய மாணவர் சங்கத் தின் மாவட்ட செயலாளர் தினேஷ் ராஜா ஆகியோர் தலைமையில் அவ் வமைப்பைச் சேர்ந்தோர் வெள்ளி யன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ளியன்று மனு அளித்தனர்.