மேட்டுப்பாளையம், செப்.11- மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந் தைக்கு தடுப்பூசி செலுத்தியபோது உடலில் உடைந்து போன ஊசி சிக்கி கொண்டிருந்த சம்பவம் தொடர்பாக குழந்தையின் பெற் றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். கோவை மாவட்டம், மேட்டுப் பாளையத்தில் உள்ள எம்.எஸ்.ஆர் புரம் பகுதியில் வசித்து வருபவர் பிராபகரன் (28). இவரது மனைவி மலர்விழி (20). கர்ப்பிணியான மலர்விழி கடந்த மாதம் ஆக.19 ஆம் தேதி பிரசவத்திற்காக மேட்டுப் பாளையம் அரசு மருத்துவமனை யில் அனுமதிக்கபட்டார். மலர் விழிக்கு ஆக.20 தேதி அறுவை சிகிச்சை மூலம் ஆண் குழந்தை பிறந்தது. தாயும் சேயும் நலமுடன் இருக்க, குழந்தை பிறந்த அடுத்த நாளான ஆக.21 ஆம் தேதி தடுப் பூசி செலுத்த வேண்டும் என தெரி வித்து குழந்தையின் இடது கையில் ஒரு ஊசியும், இடது கால் தொடை பகுதியில் ஒரு ஊசியும் செலுத்தப் பட்டுள்ளது. அன்று முதலே குழந்தை அழுது கொண்டிருந்த நிலையில் கடந்த ஆக.31 ஆம் தேதியன்று மருத்துவ மனையில் இருந்து டிஸ்சார்ச் செய் யப்பட்டு தாயும், குழந்தையும் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட் டுள்ளனர். வீட்டிற்கு வந்த பின்னர் குழந்தை வலியால் துடித்தபடி இரவு, பகல் என விடாமல் அழுது கொண்டே இருந்துள்ளது. மேலும், தடுப்பூசி செலுத்தப்பட்ட குழந் தையின் இடது கால் தொடை பகுதி யும் வழக்கத்திற்கு மாறாக வீங்கி கொண்டே வந்துள்ளது. இந் நிலையில் குழந்தையை குளிப் பாட்டியபோது குழந்தையின் இடது தொடையில் இருந்து மெல்லிய ஊசி வெளியே நீட்டியபடி தெரிந் துள்ளது. இதனால் அதிர்ச்சியில் ஆழ்ந்த பெற்றோர் குழந்தையின் உடலை பார்த்த போது செவிலியர் தடுப்பூசி போட்ட இடத்தில் ஊசி அகற்றப்படாமல் இருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து குழந் தையின் உடலில் சிக்கியிருந்த ஊசி அகற்றப்பட்டு அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மேட்டுப் பாளையம் அரசு மருத்துவமனை யில் அலட்சியமாக செயல்பட்ட பணி மருத்துவர் மற்றும் ஊசி செலுத்திய செவிலியர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அன்றைய தினமே குழந்தையின் தாய் மலர்விழி மருத்துவமனை தலைமை மருத் துவரிடம் புகார் மனு அளித்தார். ஆனால் புகார் தெரிவித்து இரண்டு நாட்களாகியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. இதனால் வேதனையில் ஆழ்ந்த குழந்தையின் பெற்றோர் புதனன்று மேட்டுப்பாளையம் காவல்நிலை யத்தில் புகார் அளித்தனர். புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறை யினர் விசாரணையை துவக்கி யுள்ளனர். குழந்தையின் தயார் மலர்விழி சார்பில் கொடுக்கப் பட்டுள்ள இப்புகார் மனுவில், அலட்சியமாக செயல்பட்டு தனது குழந்தைக்கு ஏற்பட்ட வேதனைக்கு காரணமான அரசு மருத்துவர் மற்றும் செவிலியர் மீது சட்ட ரீதி யாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். மேலும், தடுப்பூசி செலுத்திய போது குழந்தையின் உடலுக்குள் ஊசி உடைந்து விடுகிறது என்றால் அரசு மருத்துவமனைகளில் பயன் படுத்தப்படும் ஊசிகள் தரமற்றதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வரு கிறது. ஏற்கனவே குழந்தையின் உடலில் ஊசி சிக்கியிருந்தது தொடர்பாக ஊரக சுகாதாரத்துறை இயக்குனர் பதில் அளிக்க மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.