கோவை, அக். 20 – தமிழ்நாடு அரசு உதவிபெறும் கல்லூரி அலுவலர் சங்கத்தின் கோவை, தருமபுரி மண்டல மாநாடு கோவையில் நடைபெற்றது. தமிழ்நாடு அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பணியாற்றும் அலு வலர்கள் சங்கத்தின் மண்டல மாநாடு கோவை பீளமேடு ஹோப்ஸ் பகுதியில் உள்ள தனி யார் சமூகக்கூடத்தில் ஞாயிறன்று நடைபெற்றது. இம்மாநாட்டுக்கு மண்டல தலைவர் கே.பத்மநா பன் தலைமை தாங்கினார். மூத்த உறுப்பினர் ஆர்.கே.யோகானந் தம் சங்க கொடியை ஏற்றினார். இணைச்செயலாளர் எஸ்.பானுப் பிரியா வரவேற்புரையாற்றினார். இம்மாநாட்டை துவக்கிவைத்து சங்கத்தின் மாநில துணைதலைவர் ஏ.முருகன் உரையாற்றினார். இம் மாநாட்டில் தீக்கதிர் முதன்மை பொதுமேலாளர் கே.கனகராஜ் சிறப்புரையாற்றினார். மாநாட்டை வாழ்த்தி அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் செந்தில்குமார், மாணவர் சங்க மாவட்ட செயலாளர் தினேஷ்ராஜா உள்ளிட்டோர் உரை யாற்றினர். இதில் கோவை, தரும புரி மாவட்டத்தை சேர்ந்த அலுவ லர்கள் பங்கேற்றனர்.