பாகிஸ்தான் வாட்ஸ் அப் குழுவில் செயல்பட்ட வங்கதேச இளைஞரிடம் விசாரணை
கோவை, செப்.15- பாகிஸ்தான் வாட்ஸ் அப் குழுவில் இருந்ததாக கோவையில் உள்ள தங்கபட்ட றையில் பணியாற்றி வந்த வங்கதேச இளை ஞரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். கோவையில் தங்கப்பட்டறையில் வேலை பார்த்து வந்த வங்கதேசத்தை சேர்ந்த பாரூக் கௌசீர் என்பவர் தனது செல் போனை சர்வீஸ் செய்ய செல்போன் கடை யில் கொடுத்து இருந்தார். அப்போது கடைக்காரர் அந்த செல்போனை பார்த்த போது, பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த வாட்ஸ் அப் குழுக்களில் இணைந்து பாரூக் கௌசீர் செயல்பட்டு வந்தது தெரியவந்ததது. இதனையடுத்து அவர் கோவை மாநகர காவல் துறையினருக்கு தகவல் தெரிவித் தார். இதனையடுத்து காவல் துறையினர் பாரூக் கௌசீரை அழைத்து விசாரணை மேற்கொண்டனர். இதில், பாகிஸ்தான் முஜாகிதின் என்ற வாட்ஸ் அப் குழுவில் பாரூக் கௌசீர் பலரிடம் தொடர்பில் இருந்த தும், அவர்களிடம் கோவையில் பிடிபட்ட துப்பாக்கி தொடர்பான தகவல்களை பகிர்ந்துள்ளதும் தெரியவந்தது. அந்த குழு வில் உள்ளவர்கள் யார், அவர்களுக்கும் பாரூக் கெள்சீருக்கும் என்ன தொடர்பு என்பது குறித்து காவல்துறையினர் கடந்த இரண்டு நாட்களாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கோவையில் தங்கியுள்ள வங்காள தேசத்தை சேர்ந்த நபர்களின் பட்டியலை தங்கநகை பட்டறை உரிமையா ளர்கள் மூலம் கோவை காவல்துறையி னர் சேகரித்து வருகின்றனர்.
பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
ஈரோடு, செப்.15- பெருந்துறை பேரூராட்சி, கருமாண்டிசெல்லி பாளையம் பேரூராட்சி, சீனா புரம் கொங்கு வேளாளர் பாலிடெக்னிக் கல்லூரி, ஜே.சி.ஐ. எலைட் சங்கம், மத்திய ரோட்டரி சங்கம் இணைந்து நடத்திய பிளாஸ்டிக் ஒழிப்பு, மழை நீர் சேகரிப்பு விழிப்புணர்வு பெருந்துறை காவல் நிலையத்தில் தொடங்கிய முக்கிய வீதிகள் வழியாக சென்று விநாயகர் கோயில் அருகில் நிறைவடைந்தது. முன்னதாக இப்பேரணியை சட்டமன்ற உறுப்பினர் தோப்பு என்.டி.வெங்கடாச்ச லம் தொடங்கி வைத்தார்.