tamilnadu

img

கோவையில் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள் மருத்துவக் குறைபாடுகளை சரிசெய்ய பி ஆர் நடராஜன் எம்பி வலியுறுத்தல்

கோவை, ஆக. 14-  கோவை மாவட்டத்தில் சமீப நாட்களாக கொரோனா மரணங் கள் அதிகரித்து வரும் நிலையில், சிகிச்சையளிப்பதிலுள்ள மருத்து வக் குறைபாடுகளை உடனடி யாக சரிசெய்து மக்களைப் பாது காக்க வேண்டும் என பி.ஆர். நடராஜன்.எம்.பி., வலியுறுத்தி யுள்ளார். இதுகுறித்து கோவை நாடா ளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நட ராஜன் வெளியிட்டுள்ள அறிக் கையில் கூறியிருப்பதாவது, கொரோனா தொற்றால் பாதிக் கப்பட்டு மரணம் அடைவோர் எண்ணிக்கை கோவையில் கடந்த சில நாட்களாக அதிக ரித்து வருவது கவலையையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்துகி றது. சதவிகித எண்ணிக்கையில் குறைவு என்றாலும் ஒவ்வொரு மரணமும் சம்பந்தப்பட்ட குடும் பத்தினருக்கு பேரிழப்பாகும். கோவையில் இதுவரை கொரோனா தொற்றின் காரண மாக சுமார் 8 ஆயிரம் பேர் பாதிக் கப்பட்டுள்ளனர்.

இதில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள னர். இருந்தபோதிலும் இதுவரை யில் 150க்கும் மேற்பட்டோர் இத் தொற்றினால் மரணமடைந்துள் ளனர் என்பது வேதனையை ஏற் படுத்துகிறது. அதுவும், கடந்த இரண்டு வாரங்களில் இந்த உயிரிழப்பு எண்ணிக்கை என்பது அதிக ரித்து வருகிறது. கடந்த வாரம் புதன், வியாழன், வெள்ளி ஆகிய மூன்று நாட்களில் மட்டும் 19 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த இரண்டு நாட்களில் மட்டும் சுமார் 10 பேர் உயிரிழந்துள்ள னர். இதனால் மருத்துவக் குறை பாடு காரணமாகவே இம்மரணங் கள் நிகழ்கிறதோ என்கிற அச் சம் எழுகிறது. மேலும், மருத்து வர்கள் மற்றும் செவிலியர் கள் பற்றாக்குறையின் காரண மாக உரிய கண்காணிப்பு இல் லாதது இவ்வகையான மரணங்க ளுக்குக் காரணமாக இருப்பதும் தெரிய வருகிறது.

இதேபோன்று தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு போதிய மருத்துவ சிகிச்சை இல்லாத நிலையில், கடைசி கட்டத்தில் அரசு மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டு மரணமடைவது என்கிற எண்ணிக்கையும் அதிக ரித்துள்ளது.  ஒரே நாளில் அனுமதிக்கப் பட்டு மரணமடைந்தவர்கள் என் கிற பட்டியல் அதிகரித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. மேலும், தொற்றில் பாதிக்கப் பட்டு தனியார் மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டுள்ளவர் கள் நிலை குறித்து மாவட்ட நிர் வாகமும், சுகாதாரத்துறை யும் கண்காணிப்பு மேற்கொள் ளப்படுவதில்லை என்கிற குற்றச் சாட்டு எழுகிறது. அரசிற்கு ஒவ் வொருவரின் நலனும் மிக முக்கிய மானது. ஆகவே மருத்துவக் குறைபாடுகளை உடனடியாக சரி செய்வதும், மருத்துவ ஊழியர் களின் பற்றாக்குறையைப் போக்குவதும் தற்போது மிக அவசியமான ஒன்று என கருது கிறேன். இதேபோன்று, பொதுமக்க ளும் நோய்த்தொற்று முற்றிய நிலையில் மருத்துவமனைக்கு வருவது என அலட்சியமாக இருப்பதும் ஆபத்தானதே. தொற் றுக்கான அறிகுறி இருந்தால் உடனடியாக அரசு மருத்துவம னையில் பரிசோதனையை மேற் கொண்டு விழிப்புடன் இருக்க வேண்டுகிறேன்.

சமூகப் பரவல் இல்லை என அரசு திரும்பத் திரும்ப சொன்னாலும் அது நம் பிக்கைக்கான வார்த்தையாக மட்டுமே எடுத்துக் கொள்ள முடி யும்.  நிதர்சனத்தில் சமூகப் பரவல் ஏற்பட்டு விட்டதோ என்கிற ஐயம் எழுகிறது. உதாரணமாக விபத்தில் காயமடைந்து கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பலருக்கு சிகிச்சைக்கு முன்பு கொரோனா பரிசோதனையில் அவர்களுக்கு தொற்று இருப்பது உறுதி ெய்யப்பட்டுள்ள சம்பவங்கள் இதனை மெய்ப்பிக்கிறது. ஆகவே சுகாதாரத்துறை பரிசோ தனைகளை அதிகரிப்பதில் கவ னம் செலுத்த வேண்டும். இதே போன்று நோய்த்தொற்ற்றாளர் களின் எண்ணிக்கை, மரண மடைந்தவர்களின் எண் ணிக்கை, நாள்தோறும் செய்யப் படும் பரிசோதனைகளின் எண்ணிக்கை ஆகியவற்றை மாவட்ட நிர்வாகம் வெளிப் படையாக அறிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.